Monday, December 16, 2013

தனிமையில் கட்டுடைத்து

இதய வீட்டுக்குள் நுழைந்தது நீ...
உட்புறமாய்த் தாளிட்டதும் நீ....
வரவேற்பறையினில், விருந்தினரின் தோரணையில்,
அளவான புன்னகையுடன்,
அமர்ந்துவிட்டாய் அசைவின்றி.
நானோ, பண்பாட்டு விலங்கிட்டு
கைகட்டிக் கைதியாய் நிற்கின்றேன்.
நேரம் செல்லச் செல்ல
ஏதோ ஒரு அச்சம் பெருகுகிறது---
பூட்டிய இதய வீட்டின்
தனிமையில் கட்டுடைத்து
திடீரென......
அழுதுவிடுவார்களோ
இன்னும் முதிராத
நம் காதல் குழந்தைகள்?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அருமை...

வாழ்த்துக்கள்...

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனபாலன்