Wednesday, May 22, 2013

கண்மணியே பேசு

நாளெலாம்...நகையும் துள்ளலும்
மழலையின் மகிழ்வும், காதலின் குழைவும்
செவிக்குத் தேனாகும் கண்மணி உன் பேச்சு.

கண்ணின் மொழியில் கள்ளூறும்
புதுமணப் பெண்ணுன்
புது வளைகளின் பெயரிலாப்
புதுமொழிகளும் புரிபடும் எனக்கு.

மெல்லினமும் வல்லினமும்
சரி விகிதமாய் சதிராடும்
ஜதி பழகிடும்
உன் உடல்மொழியில்.

உணர்வழிந்து உறங்கிக் கிடக்கையிலும்
இரவு முழுதும்
கதை கதையாய்ச் சொல்லும்
காதோரம் உன் சுவாசக் காற்று

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

கௌதமன் said...

ரசித்தேன்.
வாழ்த்துகள்.

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனபாலன், கௌதமன்.