Thursday, May 9, 2013

பிரிவாற்றாமை


கொஞ்சி முத்தமிட
குழந்தைகளும் கூட இல்லை
நெஞ்சு மேல் நடை பயிலும்
பிஞ்சுக் கால்கள் இங்கு இல்லை
கஞ்சித் தண்ணி ஊத்திவிட
உன் கைக்கரண்டி இங்கு இல்லை
சர்க்கரை இருக்குதடி சகியே
கரும்புக்கழி நீயில்லையே
உன் சங்கேத பாஷை போல
இங்கே சங்கீதம் இனிக்கலையே
பஞ்சு மெத்தையிலே படுத்தால்
பக்கத்திலே நீயில்லையே
நஞ்சு போல் போகுதடி நேரம்
என்னைத் துருப்பிடிக்க வைக்குது இந்த தூரம்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பிரிவு சிரமம் தான்...

Yaathoramani.blogspot.com said...

பிரிவுத் துயர் சொல்லும் கவிதை
மிக மிக அருமை
வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

மனதில் சற்று கனம் கூட்டுகிறது கவிதை
அதன் உள்ளார்ந்த பொருள்..
எம்முள் விழிநீர் வழிந்த்டச் செய்கிறது...
இப்படியான சூழல் துருப்பிடித்த பொழுது
என்பது நிதர்சனமே...

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனபாலன், ரமணி, மகேந்திரன்