Thursday, April 18, 2013

பொய்யெல்லாம் உனதே

நள்ளிரவில் களுக்கென்று சிரித்து
"ஒன்றுமில்லையம்மா கனவு" என்றாய்
சந்தேகப் படும் தங்கையிடம்
"வெறும் friend டீ" என்றாய்
அக்கா பெண்ணுக்கு முத்தமிட்டு
"என் செல்லம்" என்றாய்
என்னிடம் சொல்கிறாய்
"இதெல்லாம் தப்பு"
நம் காதலில்-
பொய்யெல்லாம் உனதே

3 comments:

கௌதமன் said...

பொய்யெல்லாம் உனதே; மெய்?

கவியாழி said...

காரணம் வயது?

மோ.சி. பாலன் said...

கௌதமன் - காதலுக்காகப் பெண்கள் எத்தனை பொய்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.

கவியாழி - காரணம் சமுதாயம்