Thursday, April 18, 2013

திருமண நாள்

எனது திருமண நாளன்று (மார்ச் 8) எழுதியது:
-----------------------------------------------------------------

எங்கிருந்தோ வந்தாள்
இனி உன் பெண்சாதி நான் என்றாள்
இங்கிவளை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்..

இன்றுடன் ஆண்டுகள் ஆயின பதினைந்து

நன்றி சொல்ல நூறுண்டு
இன்று சொல்வேன் ஒன்று
நன்றி.
என் சிறு குறைகள் திருத்தி
என் பெருங்குறைகள் பொறுப்பதற்கு. 

5 comments:

கீதமஞ்சரி said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்வில் மகிழ்ச்சி தழைக்கவும் வாழ்த்துக்கள்.

கவியாழி said...

திருமணத்திற்குப்பின் அவளும் தாயாகிறாள் அவள் குழந்தைக்கு மட்டுமல்ல உங்களுக்கும்.திருமணநாள் வாழ்த்துக்கள்

கௌதமன் said...

மார்ச் எட்டா! வாழ்த்துக்கள். குறித்து வைத்துக் கொள்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

இன்று ஒரு நாளில் மட்டும் உங்களின் 11 பதிவுகள் எனது டாஷ்போர்டில் வந்துள்ளன... ரீடரில் வாசித்தேன்... வாழ்த்துக்கள் பல...

தினம் ஒரு பதிவு தொடர வாழ்த்துக்கள்...

மோ.சி. பாலன் said...

நன்றிகள் பல கீதமஞ்சரி, கவியாழி, தனபாலன், அப்பாதுரை

தனபாலன் - தினம் ஒன்று இல்லாவிட்டாலும் அடிக்கடி பதிய முயற்சிக்கிறேன்