Saturday, January 19, 2013

விடியலின் பிறகும் வெண்ணிலா

1.
மழலைக்கு சோறூட்ட காலையிலும் என்னை
எங்கேனும் ஓர் அன்னை தேடுகிறாளோ?
தேடிப் பார்த்தது -
விடியலின் பிறகும் வெண்ணிலா

________________________________________________

2.
காலைக் கதிரில் கன்னம் வெளுத்து
வெட்கச் சிவப்பு மறைந்தது.....
இரவின் இனிமை -
இன்றும் வரும் என்றாலும்....
பிரியா விடைபெற
பிரியத்துடன் பூமியை நோக்கியது
வேலைக்குப் புறப்படும்
கணவனை ரசிக்கும் மனைவிபோல்
விடியலின் பிறகும் வெண்ணிலா



3 comments:

கௌதமன் said...

நல்லா இருக்கு மோ சி பி!

ஹேமா said...

இரு நிலாக்களும் அழகு !

மோ.சி. பாலன் said...

நன்றி கௌதமன், ஹேமா.