Saturday, September 15, 2012

இயற்கையின் வெற்றி


நிகழ்ச்சியின் பெயர் திருமண வரவேற்பு.
நிகழ்ந்தது என்னவோ பெண்களின் அழகுப் போட்டி.
கணவர்களின் பொருளீட்டும் திறனைப்
பறைசாற்றும் நவநாகரிக நகைகள் ஒருபுறம்.
பிறந்தவீட்டின் பெருமையைப் போற்றும்
பாரம்பரிய நகைகள் ஒருபுறம்.
பரஸ்பர விசாரிப்புப் பேட்டிகளில்
ஒளிந்திருந்தன போட்டிகள்.
பட்டுப் புடவைகளில் நடந்தது - பார்டர் போர்.
ஜாக்கெட்டுகளிலும் ஜன்னல் போர்.
செயற்கைப் போர்களின் இறுதியில்
வென்றது என்னவோ இயற்கையே-
பெண்களின் கூந்தலில் சீருடையாய் மல்லிகை.

5 comments:

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

வென்றது என்னவோ இயற்கையே-
பெண்களின் கூந்தலில் சீருடையாய் மல்லிகை. //

அருமை அருமை
அலங்கார வண்ண விளக்குகளிடையில்
குத்துவிளக்கு போல
நிச்சயம் ஆயிரம் பகட்டுகள் சேர்ந்தாலும்
ஒரு இயற்கைக்கு ஈடாகுமா ?
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

இன்றைய நிலைமை வரிகள்.என்னதான் பணம் குவிந்தாலும் இயற்கையை வெல்ல வழியே இல்லை !

கௌதமன் said...

ஆஹா சூப்பர்!
மிகவும் ரசித்த வரி:
பட்டுப் புடவைகளில் நடந்தது - பார்டர் போர்.

மோ.சி. பாலன் said...

ரமணி, ஹேமா, கௌதமன் மூவருக்கும் என் நன்றிகள்.