Thursday, May 19, 2011

காவடிகள் ஆடி வருகுதே

ஆடி மாதம் காவடிகள் ஆடி வருகுதே
ஆடிப் பாடிப் பரவசமாய் ஓடி வருகுதே
கோடி கோடிக் கால்கள் கோயில் தேடி வருகுதே - குமரன்
பக்தர் கூட்டம் குடும்பமாகக் கூடி வருகுதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)

பசும்பாலெடுத்துப் பழமெடுத்துப் படை நடக்குதே
திருநீறெடுத்து மேலுடுத்தி நடை நடக்குதே
பன்னீரோடு பூக்கள் பாலன் உடையுமாகுதே - பக்தர்
பாடல் கூட பாலனுக்குப் படையலாகுதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
சிங்கார வேலா செந்தூரின் பாலா
வண்ண வண்ணக் காவடிகள் ஆடுதப்பா
என்னப்பனே என் ஐயனே உனைக் கண்டாலே
பரவசமும் ஆக்குதப்பா

குருபராவென குவியும் கூட்டத்தில் குன்றும் மறையுதே
அரகராவென அழைக்கும் சத்தத்தில் அமைதி பிறக்குதே
அச்சம் பீதி பயங்கள் யாவும் விடைகொடுக்குதே - இனி
மிச்ச வாழ்வும் மகிழ்ச்சியாக விடை கிடைக்குதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)