Wednesday, January 6, 2021

உறவுகள் தொடர்கதை; வார்த்தைகள் சிறுகதை

வார்த்தைகளால் காயமுற்ற உள்ளங்களுக்கு மருந்தாக, கவியரசர் கண்ணதாசன் அவர்களின் "உறவுகள் தொடர்கதை" பாடல் வரிகளைச் சில மாற்றங்கள் செய்து எழுதியுள்ளேன்.. 
 
***** 

உறவுகள் தொடர்கதை 
வார்த்தைகள் சிறுகதை 
கொடிய சொல் இன்று முடியட்டும் 
இனிய சொல் என்றும் தொடரட்டும் 
இனியெல்லாம் நலமே 

நாள் ஒன்றிலும் சோகம் 
வளர்கின்றதோ வாதம் 
வாழ்வெங்கிலும் ஆதங்கம் 
நீ கண்டதோ துன்பம் 
இனி காணலாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம் 
நதியிலே புதுப் புனல் 
நாவிலே புது மொழி 
நம் சொந்தமோ இன்று கனிந்தது 
துன்பம் மறைந்தது 

உன் நெஞ்சிலே பாரம் 
உனக்காகவே நானும் 
ஒரு ஆறுதல் கூறுவேன் 
உன் கண்களின் ஓரம் 
எதற்காகவோ ஈரம் ? 
நல்வார்த்தை நான் கூறுவேன் 
வேதனை தீரலாம் 
வரும் பகை விலகலாம் 
எந்நாளுமே நீயென் 
தமிழெனும் தேனில் நனையலாம் 

இந்தப் பாடல் Smule-ல் 
https://www.youtube.com/watch?v=0bvTADuRJp0

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் வார்த்தைகளில் கவிதை நன்று.

மெட்டுக்குப் பாட்டு! தொடரட்டும் பதிவுகள்.

பாலா சிவசங்கரன் said...

மிக்க நன்றி வெங்கட்