Saturday, May 10, 2014

அம்மா...

உயரத்தைப் பொருட்படுத்தாது
உவப்புடன் கழுத்தை நீட்டி
குடும்பம் எனும் இரட்டை மாட்டு வண்டியில்
அப்பாவின் இழுப்புக்கு மூச்சிரைக்க ஓடி
சில நேரம் முரண்டுபிடித்து
வண்டியைச் சரியான பாதையில் திருப்பி
உன் பிள்ளைகள் நாங்களும்
ஏதேனும் ஒருவிதமாய் உருப்பட
ஓடி ஓடி இன்னும் ஓயாத அன்னையே...
வயதான காலத்திலும்
சுமையான உந்தன் கழுத்து பாரத்தைப்
புனிதமென்று போற்றிப் பொட்டிட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்ள
பாட்டனிடம் பாடாய்ப் பட்ட
பாட்டியிடமா கற்றாய்?
பைத்தியம் நீ.

4 comments:

Anonymous said...

வணக்கம்
அன்னையவள் போற்றும் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோ.சி. பாலன் said...

நன்றி ரூபன்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன்