Thursday, February 23, 2012

பாலாறு

எனது பாட்டன் காலத்திலும் 
பாலாற்றின் கரையில்தான் 
எங்கள் ஊர் சுடுகாடு.

என் காலத்தில்,
எங்கள் ஊர் சுடுகாட்டின் அருகில்
செத்துக் கிடக்கிறது பாலாறு.

வட்டமிட்டு, வட்டமிட்டு,
பிணந்தின்னும் கழுகுகளாய்
மணல் லாரிகள்.

4 comments:

கௌதமன் said...

ஒன்பது வரிகளில்
தொண்ணூறு ஆண்டு
கால சரித்திரம்!

Anonymous said...

excellant!!

Krissel

ஸ்ரீராம். said...

அருமை.
மணல்திருடும் லாரிகளிருந்து சிந்து மணலை ஆற்றின் கண்ணீர்த் துளிகளாய்ச்சொல்லும் கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது.

மோ.சி. பாலன் said...

நன்றி கௌதமன், Krissel, ஸ்ரீராம்