Saturday, July 10, 2021

REMIX இது. ORIGINAL எது? #1

REMIX இது. ORIGINAL எது? #1 

ரீமிக்ஸ் கவிஞர்களின் அவஸ்தைகள் பற்றி சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். எந்த வரியைப் படித்தாலும் கேட்டாலும் அதை ஒரு பாடலின் ட்யூனில் பொருத்திப் பார்ப்பது என்பதுதான் அந்த அவஸ்தை. 

அதே போல் எந்த ஒரு நல்ல பாடலைக் கேட்டாலும் இந்த ட்யூனுக்கு இன்னும் சிறப்பாக நான் எழுதுவேனாக்கும் என்று வரிந்து கட்டுவது இவர்களின் இன்னொரு அவஸ்தை. இதில் பெரும்பாலும் கிடைப்பது தோல்வியே! வாலிக்கும் வைரமுத்துவுக்கும்  tough கொடுக்க நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான செயல் என்பதை இவர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை. உதாரணமாக கவிச்சிற்பி கங்கை அமரன் (நான் கொடுத்த பட்டம் தானுங்க. நல்லா இருக்கா?) அவர்கள் எழுதிய "மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?" என்ற அற்புதமான பாடலைக் கெடுத்து "கண்ணில் இந்தப் பார்வையின்றி யாரும் பார்த்தல் கூடுமோ?" என்று அற்பமாக எழுத ஆரம்பிப்பார்கள்! இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் இவர்கள் இந்த அற்ப முயற்சிகளை அற்பம் என்று புரிந்து கொண்டு கமுக்கமாக trash  செய்து விடுவதுதான்!

Recycling the waste என்ற உயரிய நோக்கில்  எனது trash folder-லிருந்து சில remix முயற்சிகளை இங்கு எழுதி, original பாடலை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று விளையாடலாம் என்று தோன்றியது. விளையாட்டு பிடித்திருந்தால் தொடரலாம்.

கீழ்க்கண்ட remix-ன் original பாடல் எது?

"கண்டதும் கொன்றானடி பாவி

புல்லட்டையே எடுத்து...

Gun-க்குள்ளே தொடுத்து...

கண்டதும் கொன்றானடி"

முதல் போட்டி என்பதால் எளிமையாக ஆரம்பிப்போம்!

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா...

?

மோ சி பாலன் said...

மன்னவன் வந்தானடி தோழி!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு ஆரம்பம்.

மாற்றி மாற்றி பாடுவது - விளையாட்டாக இப்படிச் செய்வதுண்டு.

போட்டி நன்று.

மோ சி பாலன் said...

நன்றி வெங்கட்