Sunday, April 12, 2015

கோட்டுக்குப் பதில் பூட்டு

வில்லுக்குள் ஜனகனும்
கண்ணுக்குள் ராமனும்
கோட்டுக்குள் இலக்குவணனும்
வனத்துக்குள் இராவணனும்
மனதுக்குள் அனுமனும்
தணலுக்குள் குடிமகனும்
தனக்குள் பூமகளும்
சிறைவைத்தனர் சீதையை

மாரீசன் செய்தது சதி
ராமன் சென்றது விதி
சீதை இழந்தது கதி
இலக்குவணன் இழந்தது மதி
இருந்தால் போட்டிருப்பான்
கோட்டுக்குப் பதில் பூட்டு

Sunday, April 5, 2015

'நெரிசலாயிட்டேன்' - ஒரு சாலையின் சோககீதம்

கொத்துக் கொத்தா வெட்டிப்புட்ட
எக்குத்தப்பா நீ மூடிவுட்ட
தாரும் தான் இல்லாம கொட்டிவெச்சியே
ஜல்லிக்கல்ல மேல..
நான் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன்

தோசைக்கு மேல தோசை சுட்டியே
ரோட்டு மேல ரோட்டப் போட்டு அடுக்கிவுட்டியே
கிரவுண்டு ப்ளோரத்தான் பேஸுமென்டுபோல்
ரோட்டவுட்டு பத்து அடி எறக்கிவுட்டியே
மழத்தண்ணி போவ ஒரு காவாயும் இல்ல
மனுஷங்க போவ ஒரு ப்ளாட்பார்மும் இல்ல
நான் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன்