Showing posts with label ஐயப்பன். Show all posts
Showing posts with label ஐயப்பன். Show all posts

Tuesday, December 22, 2015

மணிகண்டன் தரிசனம்

மழைமுகிலெனவே இருமுடி சுமந்து
மலைதனைக் கடந்தால் மணிகண்டன் தரிசனம்

நெய்யென உருகிடும் உள்ளத்தில் ஒளிர்வான்
சந்தனமாய் எங்கள் சிந்தையில் குளிர்வான்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

அன்னையின் துயரற புலிப்பால் கொணர்வான்
அன்பரின் குறைகளைக் குறிப்பால் உணர்வான்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

பதினெட்டு படிதரும் பலவித மாற்றம்
படிப்படியாய் வரும் வாழ்வில் முன்னேற்றம்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்