Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Tuesday, June 6, 2017

கீதாஞ்சலி - பாரதி பாணியில் : பாடல்கள் 39, 40



(39)
சந்தம் : ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

இதயம் இறுகிப் பாலையாகக் காயும் போதிலே
அதனைக் கருணை மழையில் நனைக்க இறைவ நீயும் வா

நளினம் எந்தன் வாழ்வை விட்டு நீங்கும்போதிலே
பொழியும் இனிய கீதம் கொண்டு இறைவ நீயும்வா 

பணியின் சுமைகள் சூழ்ந்து ஓசை எழுப்பும் போதிலே
ததும்பும் அமைதி அரும்ப எந்தன் அருகில் நீயும் வா

குறுகி எந்தன் வறிய இதயம் முடங்கும் போதிலே
மடைகள் உடைத்து மன்னன்போல மிளிர்ந்து நீயும் வா

ஆசை எந்தன் கண்ணிரண்டை மறைக்கும் போதிலே 
இடிகள் மின்னல் எழுப்பிக்கொண்டு இறைவ நீயும் வா

Tagore’s English version: 
When the heart is hard and parched up, come upon me with a shower of mercy.
When grace is lost from life, come with a burst of song.
When tumultuous work raises its din on all sides shutting me out from beyond,
come to me, my lord of silence, with thy peace and rest.
When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my king,
and come with the ceremony of a king.
When desire blinds the mind with delusion and dust, O thou holy one, thou wakeful,
come with thy light and thy thunder. 

(40) 

சந்தம்:  ஆசை   முகம்   மறந்து   போச்சே 

நாட்கள்   நகர்ந்து   செல்லலாச்சே   நெஞ்சம் 
பாலை   நிலம்   போல்   சுடலாச்சே 
நீண்டு   திறந்த   அடிவானம்   எங்கும் 
ஈர   முகில்கள்   ஒன்றும்   காணேன் 

வீசியடிக்கும்   புயல்   செய்தே  -  விண்ணை 
அதிரவைக்கும்   மின்னல்  தந்தே 
உயிரை   உருக்கும்   ஊமை  வேனில்  -   அதை 
விரைவில்   அகற்றிவிடு   தேவா 

கோபம்  பொழியுந்   தந்தை  முன்னே  -  அன்னை 
குனிந்த  விழி  திரளும்  நீர்  போல் 
வானிலிருந்து  அருள்  மேகம்  -  அதைத்   
தாழ்ந்து  தவழவிடு  தேவா 

Tagore’s English version: 
The rain has held back for days and days, my God, in my arid heart.
The horizon is fiercely naked—not the thinnest cover of a soft cloud,
not the vaguest hint of a distant cool shower.
Send thy angry storm, dark with death, if it is thy wish,
and with lashes of lightning startle the sky from end to end.
But call back, my lord, call back this pervading silent heat,
still and keen and cruel, burning the heart with dire despair.
Let the cloud of grace bend low from above like the tearful look of the mother on the day of the father’s wrath

Friday, February 10, 2017

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 36

சந்தம்: மனதிலுறுதி வேண்டும்

மனதிலுறுதி வேண்டும்
இன்பதுன்பம் எளிதென்று ஏற்றிட
இறைவ நீயெந்தன் நெஞ்சின்
வறுமையின் வேரினை அறுத்திட வேண்டும்

ஏழைகளை விட்டு நீங்கி
மமதையுள்ளோர் முன்பு மண்டியிடாமல்
நிதமும் சேவையில் மூழ்கி
எனது அன்பும் இங்கு பயனுற வேண்டும்

நலிந்த செயல்கள் நீக்கி
பொலிந்திடவே நெஞ்சில் பலமும் வேண்டும்
பெருமைகள் விட்டு நீங்கி
நின் சரண்புக நெஞ்சினில் உரமும் வேண்டும்

Tagore's English version:

This is my prayer to thee, my lord—strike, strike at the root of penury in my heart.Give me the strength lightly to bear my joys and sorrows.Give me the strength to make my love fruitful in service.Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.Give me the strength to raise my mind high above daily trifles.And give me the strength to surrender my strength to thy will with love.

Friday, January 27, 2017

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 35

சந்தம்: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

எங்கு மனங்கள் அச்சமின்றி
தலை நிமிர்ந்து நிற்குமோ
எங்கு பணத்தின் தேவையின்றி
யார்க்கும் கல்வி கிட்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு பூமி பூசல் கொண்டு
பிரிந்து நிற்கவில்லையோ
எங்கு நெஞ்சின் ஆழம்கண்டு
உண்மை வார்த்தை ஆகுதோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு மக்கள் முயற்சி நல்ல
மாற்றம் நோக்கிச் செல்லுமோ
எங்கு தெளிந்த எண்ண ஓடை
பாலை நிலங்கள் தாண்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

பரந்த எண்ணம் செயல்கள் எங்கு
சிந்தையைச் செலுத்துமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

Tagore’s English version:

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

Friday, November 18, 2016

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 23

சந்தம் : ஆசை முகம் மறந்து போச்சே

மருகி மருளும் அந்த வானம் - புயல்
திரளும் இரவில் உந்தன் பயணம்
உருகும் எனக்கும் இல்லை உறக்கம் - இருள்
திறந்து திறந்து கண்கள் தேடும்
உருவம் எதுவும் இல்லை அங்கே - உந்தன்
வழியும் தெரியவில்லை எங்கே?
கரிய நதிக்கரையின் வழியோ? - அடர்
வனத்தின் விளிம்பின் வழி தானோ?
இனம் புரியா இருட்டு வழியோ - என்னைக்
காண நீ வரும் வழி ஏதோ?

Tagore's English version:

Art thou abroad on this stormy night on thy journey of love, my friend? The sky groans like one in despair.
I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend!
I can see nothing before me. I wonder where lies thy path!
By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest,
through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend?

Thursday, December 4, 2014

பாரதியின் குயில்பாட்டு

பாரதியின் குயில்பாட்டில் குயிலானது தனது காதலனாகிய குரங்கினை மனிதனுடன் ஒப்பிட்டுப் புகழும் கீழ்க்கண்ட வரிகள் மிகவும் அழகு!

வானரர் தம் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர் போலாவரோ?
வாலுக்குப் போவதெங்கே?!!

பாரதியின் பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை. பாரதி, வானரத்தை மனிதனுடன் ஒப்பிட்டு அதன் மேன்மைகளை இப்பாடலில் புகழ்ந்திருப்பதில் உள்ள நகைச்சுவையையும் உண்மையையும் நீங்களும் இரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே வெறும் விளக்க உரையாக இல்லாமல் இந்தப் பாடலை ஒருசில கண்ணோட்டங்களில் பொருத்தி என் கருத்துகளை இங்கு பகிர்கிறேன்.

விளையாட்டு / சாகசம்:
//கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்//
நாம் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்றெல்லாம் விளையாட்டு மற்றும் சாகசங்கள் செய்வதெல்லாம் வானரம் போன்ற விலங்குகளைப் பார்த்தெழும் உந்துதலால்தானே? குரங்கிலிருந்தான நம் பரிணாம வளர்ச்சியிலும் சாகச உணர்வு நமக்கு ஒட்டிவந்திருக்கவேண்டும். மாணவர் தேசியப் படையில்(NCC) இருந்தபோது மரங்களுக்கு இடையில் கட்டிய கயிற்றுப் பாலத்தில் நடந்து சென்றது, தொங்கும் கயிறைப் பிடித்து தண்ணீரைத் தாண்டியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்படித் தாண்டும்போது தண்ணீர்த்தொட்டியில் முழங்காலைத் தட்டிக்கொண்டதும் தான் !! அம்மாடி…என்ன ஒரு வலி..?

காதல் / ஊக்கம் / ஆன்மிகம்:
இந்தப் பாடலைத் தத்துவரீதியாய்க் கொஞ்சம் பார்ப்போம்.
தலைவியானவள் தலைவனை இந்தக் குயிலினைப் போல் புகழ்ந்தால் எந்தத் தலைவன்தான் குரங்கினைப்போல் வாலைச் சுருட்டிக் கிடக்கமாட்டான்?! ஹ்ம்ம்..( புகழ்கிறார்களா என்று தெரியாது.. ஆனால் புகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!! நன்றி கமல்!!)
அனுமனுக்கு அவன் பலம் மற்றவர் சொல்லித்தான் புரிந்தது. வானர வழித்தோன்றல்களான நமக்கும் பிறர் சொல்லும் ஊக்கவார்த்தைகள் நம் பலத்தை நமக்குக் காட்டவும், வளர்க்கவும் உதவும் என்று கருதுகிறேன்.

புவியின் மீது மனிதனின் ஆதிக்கம்:
"காக்கை, குருவி எங்கள் ஜாதி" "உயிர்களிடத்து அன்பு வேணும்" என்றெலாம் எழுதிய பாரதி, வானரத்தைப் புகழ்ந்து எழுதியதில் வியப்பொன்றும் இல்லை. பிற உயிர்களின் மீதும், இயற்கையின் மீதும் நாம் பரிவு கொள்ள வேண்டும் என்பது ஒரு விழைவாக மட்டும் இன்று இல்லை. புவியில் மனித இனம் பிழைத்திருக்கவேண்டுமாயின் இயற்கையின் மீது மனிதன் கவனம் கொள்வதென்பது அவசியத் தேவையுமாகிவிட்டது. புவியை மனிதன் சொந்தம் கொண்டாடுவதையும் அவனின் ஆதிக்க உணர்வையும் தகர்த்துப் பரிகசிக்கிறது இந்தப் பாடல்.

"மூளை என்னும் ஊளைச்சதை கொஞ்சம் அதிகம் இருக்கிறது என்பதற்காக, மனிதா நீ அலட்டிக் கொள்ளாதே" என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லிவிடுகிறான் பாரதி!!