Monday, October 10, 2022

வாளியை சிந்துறேன்....

கவிஞர் தாமரை, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் பாடகி மதுஶ்ரீ மூவருக்கும் பெரிய ஓ 

மல்லிப்பூ பாடல் பல வருடங்களுக்குப் பிறகு நான் ரிப்பீட் மோடில் கேட்கும் பாடல். (நியூயார்க் நகரம் தந்த அதே ஏக்கம் இந்தப் பாடலிலும் கிடைக்கிறது)

மதுஶ்ரீ   அவர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி சில விமர்சனங்கள் எனக்கும் உண்டு. ஆனால் குரல் மயக்கத்தைக் குறை கூற முடியவில்லை.

தாமரை அவர்களின் பதிவில் "வாளியை சேந்துறேன் தண்ணியக் காணோம்" என்று படித்துவிட்டு, பாடலில் "வாளியை சிந்துறேன் தண்ணிய காணோம்" என்று  கேட்கும் போது முதலில் வருத்தமாக இருந்தது.

ஆனால் காதல் மயக்கத்தில் வெற்றுவாளியைத் தான் சேந்துவாளா பெண்? சேந்திய தண்ணியை ஆட்டி ஆட்டி சிந்திவிடுவதும் காதல் மயக்கம் தானே?!

Sunday, October 9, 2022

ரீமிக்ஸ் இங்கே; ஒரிஜினல் எங்கே? 09 10 22

 ரீமிக்ஸ் இங்கே; ஒரிஜினல் எங்கே?


பிரித்தாளும் சூழ்ச்சி எல்லாம்

பிரிட்டிஷ்காரன் தொடங்கி வெச்சான்

பரிகாரம் செஞ்சு வெக்க

இங்கே யாரும் பொறக்கலையே

நம்பிக்கைய வைக்குறியே

வம்புக்குள்ள சிக்குறியே

இப்பப் புரிஞ்சிக்கோ

உண்மைய அறிஞ்சிக்கோ

சொந்த ஜனங்கள வெறுப்பத நிறுத்திக்கோ

ஈ ஆரி எச மாரி - my take

 ஈ ஆரி எச மாரி 

*****

நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது மனைவி மற்றும் மகளிடம், "பொன்னி நதி பாக்கணுமே" பாடலில் வரும் "ஈ ஆரி எச மாரி" பற்றி நான் படித்த விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

உடனே என் மகள், "நீங்களும் கவிஞர் தானே(patted myself on my back!), மாற்று வரி சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார். சற்று நேரம் வண்டி அமைதியாகப் போகவே "என்ன ஆச்சு மாற்று வரி?" என்றார். யோசிக்கணுமில்ல? என்றதற்கு, "வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் சொல்லி விட வேண்டும்" என்று உத்தரவிட்டார். வந்தியத்தேவன் குதிரையில் செல்லும் காட்சி விளக்கங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். "இதையெல்லாம் நீங்கள் மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். வரி தோன்றியவுடன் சொல்லுங்கள்" என்று கூறி விடவே வண்டி மீண்டும் அமைதியானது.

உடனடியாக சொல்ல வேண்டுமே என்று யோசித்த போது வீராணம் ஏரியின் காட்சி நினைவில் வரவே, "வீராணப் பேராழி" என்று சொன்னேன் - ஆழி என்றால் கடல்‌. கடல் போன்ற ஏரி.  இந்த வரி பரவாயில்லையா? என்று கேட்டேன். "OK..."  என்று இழுவையாகப் பதில் வந்தது. வீடும் வந்து சேர்ந்தது!

இதை இதோடு விடாமல், இரவு வீடு திரும்பிய மகனிடம் விவரித்தேன். அவரோ "வீராணம் பரவாயில்லை. பேராழி என்பது மீட்டரில் உட்கார்ந்தாலும் எச மாரி என்பது போல் ஒலிக்கவில்லையே..." என்றார். உண்மைதான்! என்று சொல்லி விட்டு உறங்கிவிட்டேன்!

இன்று பேருந்தில் ஊருக்குச் செல்லும் போது மீண்டும் யோசித்து "வீராணக் கடலோடி" என்று தீர்மானித்து வைத்திருக்கிறேன். பொன்னி நதி பாக்கணுமே - வீராணக் கடலோடி என்று link ஆகிறது. இரவு வீடு திரும்பியதும் மகனிடம் சொல்லவேண்டும்.

இதையும் பாருங்கள் இதோடு விடாமல் உங்களிடம் பகிர்ந்து விட்டேன்! 

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ??

அடடா....

இப்போது பார்த்தால் "வீழாது புலிக்கொடி" என்று மேலும் ஒரு எண்ணம் தோன்றுகிறதே.... (கொடியை கொஞ்சம் இழுத்துப் பாடாக்கூடாதா என்ன? சில இடங்களில் விட்டுக் கொடுக்காதா என்ன மெட்டு?) 

BTW, விடுதலைப் புலிகள் என்று எண்ணி விடுவார்களோ என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் -

"சோழர் காலத்தில் ஏதய்யா விடுதலைப் புலி?!"

Saturday, September 10, 2022

டாஸ்மாக்-அ மூடுங்களேன்



(REMIX of மச்சானைப் பாத்தீங்களா)

- பாலா சிவசங்கரன்


10 செப் 2022

-------*****--------


ஐயா சாமிங்களா.....

ஐயா சாமிங்களா.....

ஐயா சாமிங்களா.....


டாஸ்மாக்-அ......

டாஸ்மாக்-அ......

டாஸ்மாக்-அ மூடுங்களேன்

நம்ம தமிழ்நாடு தலை தூக்கணும்

குடிகாரன் வீடு

கொடை சாய்ஞ்சு போச்சு

அநியாயம் நிறுத்துங்களேன்

உங்க குலம் வாழ வாழ்த்து சொல்வேன்🙏


அள்ளி வெச்ச புன்னகையில்

கொள்ளி வெச்ச கோலமென்ன?(2)

அதிகாரக் கனவான்களே

நீங்க எதையாச்சும் பண்ணுங்களேன்

குடிமக்கள் வாழ்க்கை

குடியாலே போச்சு

சரி செஞ்சு காட்டுங்களேன்

உங்க குலம் வாழ வாழ்த்து சொல்வேன் 🙏


கல்யாணம் பேசித் தாய் வீட்டில் தந்த

தங்க நகைதான்

தாராந்து போச்சே...(2)

மணமேடையிட்டு மாங்கல்யம் தந்த

மன்னாதி மன்னன்

குடிகாரனாக

குடிகாரனாக

ஊர்கோல மேகங்களே

அவரைக் கண்டாக்கா சொல்லுங்களேன்

டாஸ்மாக் வாசல் தரைமீது யாரு?

தெரு நாயைக் கேளுங்களேன்

அது அவர் தானா சொல்லுங்களேன்... 

(டாஸ்மாக்-அ மூடுங்களேன்

நம்ம தமிழ்நாடு தலை தூக்கணும்)


சேரமன்னனோ இமயத்தை வெல்ல

சோழமன்னனோ கடல்தாண்டிச் செல்ல(2)

பால் தந்த மார்பை

வாள் கொண்டு வெட்டி

தாய்தந்த வீரம்

வேரத்துப் போச்சே...

வேரத்துப் போச்சே...

தமிழ் நாட்டு சொந்தங்களே

கொஞ்சம் செவி சாய்ச்சிக் கேளுங்களேன்

இயல்பான வீரம் ரத்தத்தில் இருக்கு

அதை மீட்டுக் காட்டுங்களேன்

உங்க குலம் வாழ வாழ்த்து சொல்வேன் 🙏


(டாஸ்மாக்-அ மூடுங்களேன்

நம்ம தமிழ்நாடு தலை தூக்கணும்)


நன்றி:

இசைஞானி இளையராஜா

கவிஞர் பஞ்சு அருணாசலம்

Friday, August 26, 2022

கறிவேப்பிலைக்கு காசு இல்லையடா

கறிவேப்பிலைக்கு (REMIX: புது மாப்பிள்ளைக்கு)


கறிவேப்பிலைக்கு காசு இல்லையடா

அந்த கொத்தமல்லி தான் ஓசி இல்லையடா

எந்தக் காய்கறியும் இளசா எடுப்பா

வெண்டைக் காயினைத் தான் உடைக்காதிருப்பா

பளபளப்பா

இருப்பதெல்லாம் மருந்து அப்பா


காய்கறியில் மன்னன்

கத்தரிக்காய் அண்ணன்

நீல நிறக் கண்ணன்

பம்பாயிலே பைங்கன்

பொங்கலுக்கு கொத்சு தான்

பிரியாணிக்கு தொக்கு தான் 

ரபாரபா ரப்பப்பா

ரிபி ரிபி ரிப்பிப்பி

கத்தரிக்காய் முத்திப் போனா

அத்த நீயும் வத்தல் போடு

கத்தரிக்காய் சொத்தை ஆனா 

அத்த நீயும் வெட்டிப் போடு

கூட்டு பொரியல் வறுவல் என்றே

விதவிதமாக சமைத்திடப்பா

மரபணுவில் மாற்றம் செஞ்சா

தடுத்திடப்பா


உச்சி முதல் பாதம்

அத்தனையும் லாபம்

தண்டு இலை காயும்

பூவும் விலையாகும்

நாரெடுத்து பூ கட்டு

சேலை நெஞ்சி நீ கட்டு

ரபாரபா ரப்பப்பா

ரிபி ரிபி ரிப்பிப்பி

கல்யாணம் தான் ஆவணி மாசம்

வாழைமரம் தோரணம் ஆகும்

சீர்வரிசை சீதனம் ஆகும்

சாமிக்கும் நிவேதனம் ஆகும்

தமிழர்கள் வாழும் தேசமெல்லாம்

பழமென்றால் அது வாழையப்பா

வாழையடி வாழையென வாழ்ந்திடப்பா!

Thursday, December 9, 2021

REMIX இது. ORIGINAL எது? #14

என் விருப்பம் தான்

உலகம் மொத்தம் தான்

சொந்தமாய்... இருக்க... நினைத்தேனே,

அதை, நிலத்தை வெச்சு,

நிறத்தை வெச்சு,

இனத்தை வெச்சுத்தான்,

பிரித்து விட்டுப் போனாரே.......  


(நாடுகள் எதற்கு? ராணுவம் எதற்கு? ஜெனரல் திரு பிபின் ராவத் அவர்களின் மறைவினால் மனம் வலிக்க எழுதியது)

Wednesday, November 24, 2021

REMIX இது. ORIGINAL எது? #13


விளிம்பு நிலை மனிதர் உயர வழி கேட்டார்

உழைப்பில் உயர்வு இல்லை

உயர்வில் நியாயம் இல்லை

Wednesday, October 20, 2021

விஷமுங்கோ

 மலைமலையாய் மாம்பழங்கோ

மருந்து வச்ச மாம்பழங்கோ


பளபளக்கும் பப்பாளிங்கோ

கல்லு வச்ச பப்பாளிங்கோ


குவிச்சு வெச்ச கொய்யாங்கோ

கெமிக்கல் வெச்ச கொய்யாவுங்கோ


குலை குலையா 

திராட்சைங்கோ

மருந்து தெளிச்ச

திராட்சைங்கோ


மழமழன்னு ஆப்பிளுங்கோ

மெழுகு போட்ட

ஆப்பிளுங்கோ


ஏழைக்கேத்த பழமுங்கோ

எங்க வாழைப்பழமுங்கோ

பாழும் வயிற்றைக்

கெடுக்கவே ஸ்ப்ரே

அடிச்ச பழமுங்கோ


நல்ல உணவு நாமும் தின்னு

நாப்பது வருசம் ஆச்சுங்கோ


சோத்துலயும் விஷமுங்கோ

கொழம்புலயும்

விஷமுங்கோ

கறியும்மீனும்

விஷமுங்கோ

காய்கறியும்

விஷமுங்கோ

கடைசியிலே

பாக்கப் போனா

கனிஞ்ச பழமும்

விஷமுங்கோ


விஷத்தைத் தின்னு

வாழும் மனுசன்

நல்லவனாவது

எப்படிங்கோ?

Sunday, October 17, 2021

காதோரம் நரையிருக்கு #REMIX

 Caution 60+  #REMIX

(காவேரிக் கரையிருக்கு மெட்டு)


காதோரம் நரையிருக்கு

கழுத்தோரம் திரையிருக்கு

நடையினிலே தளர்விருக்கு

நிமிர்ந்து நின்னா வலியிருக்கு

பஞ்சு போல முடியிருக்கு

அஞ்சு வயசு சிரிப்பிருக்கு

பல்லிரண்டு விழுந்திருக்கு

பிள்ளைகள் போலே மனசிருக்கு


என்னம்மோ போலிருக்கு

எப்படியோ உடம்பிருக்கு

காலையிலே தின்ற வடை

மாலை வரையில் நினைவிருக்கு

காபிக்கு சர்க்கரை இல்லை

சர்க்கரைப் பொங்கல் குக்கரில் இல்லை

ராத்திரியில் தூக்கமில்லை

கண் திறந்தும் ஆசையில்லை!


பஸ்ஸினிலே இடமிருக்கும்

ஏறுவதற்குள் நிரம்பிவிடும்

நிற்கும் நம்மைப் பார்த்தவுடன்

இளசுகள் எழுந்து இடம் கொடுக்கும்

ப்ரதர் என்ற வார்த்தை

பெரியவர் என்று மாறிவிடும்

அண்ணன் என்று சொன்னவரும்

அங்கிள் என்று சொல்ல வரும்


Thursday, October 14, 2021

கட்டுக்குள் அடங்காதவை

 செரிமானமாகாத அவமானங்களை 

அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே

புதிதாய் ஒன்று நிகந்துவிட

தூரவரிசையில் மேலும் பல நிற்பதுபோல்

துணுக்குற்று ஒடுங்குகின்றது மனம்


பொறுமை எனும் ஆமை ஓடு

கவசமா இல்லை அவமானமா?

என்ற கேள்விக்கு

சுமை என்று வருகின்றது விடை


ஊர்-வதை அஞ்சி ஊர்வதை

வீழ்ச்சியென்றால் வருத்தம் வரக்கூடும்.

பதுங்குதலென்று கொள்வோம்...


மடித்து எழுதிய கட்டுக்குள் அடங்காத

காயங்களைக் காட்டவும் முடியாமல்

மறைக்கவும் முடியாமல்

தவிக்கின்றன வரிகள்

-பாலா சிவசங்கரன்

14 10 2020