Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, May 1, 2021

ஊழல் விலகுக

நாளை இதைச் சொன்னால் வெற்றி பெற்றவர்களைச் சுட்டிக் காட்டுவது போலாகலாம். ஆகையால் இரு கட்சிகளுக்கும் பொதுவாக இன்றே சொல்லி விடுகிறேன். 

ஔவையார் ஆட்சியாளரை "வரப்புயர" என்று வாழ்த்தினார். வரப்புயர்ந்தால், நீர் உயரும், நெல் உயரும், குடிமக்கள் உயர்வார்கள். எனவே வரப்பை மட்டும் உயர்த்துங்கள் என்றார். All other things will automatically happen.

வெற்றி பெறும் ஆட்சியாளர்கள் (மந்திரிகள், MLA-க்கள்) மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு நான் வேண்டும் ஒரே ஒரு விண்ணப்பம் "ஊழல் விலகுக" என்பதே. 

All other things will automatically happen.

ஊழலை ஒழித்து விட்டாலே/குறைத்து விட்டாலே அனைத்து நலத்திட்டங்களையும் குறைந்த செலவில் நிறைவேற்ற முடியும். மிச்சமுள்ள பணத்தில் மேலும் பல புதிய நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஊழலைக் குறைத்து செலவைக் குறைந்துவிட்டால் சாராயக் கடைகளையும் மூடிவிடலாம்.

கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். (தவறு செய்யும் ஒப்பந்ததாரர்களைத் தட்டிக் கேட்க முடியும்) வேலை வாய்ப்புகள் பெருகும். வறுமை ஒழியும். 

ஊழல்களைத் திட்டமிடத் தேவையில்லை என்கிற பட்சத்தில் ஆட்சியாளர்களின் கவனம் தானாகவே மக்கள் நலத் திட்டங்களில் திரும்பிவிடும். "ஊழலுக்கு நேரமில்லாத போது மனம் நன்மைக்கும் ஈயப்படும்" என்று புதிய குறள் ஒன்று எழுதலாம்!

மேலும் முக்கியமாக, எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் சமூகவலைப் போர்களும் குறைந்து விடும்!

திமுக வென்றால் இப்படிப் பாடுவோம்:

 "ஸ்டாலின் தான் வாராரு ஊழல் ஒழிக்கப் போராரு"

அதிமுக வென்றால் இப்படிப் பாடுவோம்:

"நேர்மை நடைபோடும் தமிழகமே" 

இப்படிக்கு, ஔவையின் பேரன் பாலா சிவசங்கரன்