Showing posts with label திரைப்படப் பாடல். Show all posts
Showing posts with label திரைப்படப் பாடல். Show all posts

Wednesday, March 18, 2020

நாவல் கரோனா - REMIX

நாவல் கரோனா - REMIX
(காதல் பிசாசே பாடல் மெட்டு)

நாவல் கரோனா
நாவல் கரோனா
வேணாம் வராதே பரவாயில்லை
நாவல் கரோனா
நாவல் கரோனா
போதும் அவஸ்தைகள் பரவாயில்லை
சீனாவும் சுகமாயில்லை
ஈரானும் நலமாயில்லை
இந்தியாவை விட்டுவிட்டால் பரவாயில்லை
அமெரிக்கா பரவாயில்லை
ஐரோப்பா சரியாயில்லை
எங்களை நீ விட்டுவைத்தால் பரவாயில்லை

கொஞ்சம் ஒதுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
கைகள் கழுவல் தூய்மை பழகல்
சொல்லிக் கொடுத்தாய் நீநீநீ
ஐயோ அம்மம்மா நான் யாரோடும்
பேசாத வெட்கத்தை நீயே தந்தாய்
அப்பா அப்பப்பா நான் யார் மீதும் மோதாத சங்கோஜம் நீயே தந்தாய்
இது போதும் விட்டுச் செல்லு
தாங்காது சொன்னா கேளு
மருந்தொன்று கண்டுபிடித்தால் பரவாயில்லை

Thursday, December 12, 2019

இனிய புத்தாண்டு 2020 -:இளமை அதோ அதோ

என் வயதிற்கு இந்தப் புத்தாண்டில் "இளமை இதோ இதோ" பாடலை அப்படியே பாட முடியாது. அதனால் கீழ்க்'கண்டபடி' மாற்றியுள்ளேன்! சக வயது சகலைகள் சந்தோஷமாக இதைப் பாடலாம்!

*****
ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லாம் என் பெண்ணோட friend-கள்
இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

ராஜா சாரின் ரசிகன்
பாலு ஜானு நேசகன்
கமல் படங்கள் பார்ப்பவன்
ரஜினி ஸ்டைலால் ஈர்ப்பவன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
பெல்பாட்டக்(bell bottom) காலங்கள்
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்
SPB சாயல்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

தமிழில் மட்டும் பாடுவேன்
இந்திப் பாட்டும் கேட்டுப்பேன்
மை முஜே கே லீயே
இதிலென்ன கேலியே?
தாய் பேசும் மொழியில் பேசம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காகப் பாடும் நானும் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறுமே Smule பாடுவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

பைக் எடுத்து ஓட்டுவேன்
மைக் பிடித்துப் பாடுவேன்
சுற்றுவதில் சூரன் நான்
கத்துவதில் வீரன் நான்
புது ஆண்டில் சோகம் கிடையாது
மகிழ்ச்சிக்கு அளவேது?
நமை வெல்ல யாரும் கிடையாது
பகையென்று யார் கூறு?
நாள்தோறுமே கொண்டாட்டம் தான்
வா வா புது வருடம் போகலாம்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

Tuesday, December 10, 2019

"குடி மற" பாடல்


"சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்" பாடல் மெட்டு
---------

குடித்துக் குடித்து குடல் கெடுத்துக் கொண்டாய்
உடல் மிடுக்கும் துடிப்பும் இன்று இழந்து நின்றாய்
படித்த படிப்பும் அதை மறந்து விட்டாய்
சபை நடந்து நடந்து வரும் தரம் இழந்தாய்

எழிலும் இழந்தாய் மொழியும் இழந்தாய்
தொழிலில் வரவும் இழந்தாய்
புழுவின் பெருமை எளிதில் அடைந்தாய்
தெருவில் தனியே நடந்தாய்

இளமை இழந்தாய் இனிமை இழந்தாய் புகழும் பணமும் இழந்தாய்
குடும்பம் இழந்தாய் குழந்தை இழந்தாய் குலத்தின் பெயரும் இழந்தாய்

#குடிமற

Monday, August 26, 2019

தமிழ் சொல்லாத நன்னெறியா?


(பனியில்லாத மார்கழியா பாடல் மெட்டு)

தமிழ் சொல்லாத நன்னெறியா?
தமிழில் இல்லாத தேன்சுவையா?
மழலையும் பேசத் தயங்கிடுமா?
மறந்துவிட்டால் அது தாய்மொழியா?

முயற்சியில்லாமல் முடிந்திடுமா?
பயிற்சியில்லாமல் தொடர்ந்திடுமா?
முயற்சியில்லாமல் முடிந்திடுமா?
பயிற்சியில்லாமல் தொடர்ந்திடுமா?
தமிழ் சொல்லாத பள்ளிகளா?
மழலைக்கு ஊட்டும் கள்ளிகளா?
மழலைக்கு ஊட்டும் கள்ளிகளா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

இஷ் இல்லாமல் பெயரில்லையா?
இஷ்டம் இல்லாமல் தமிழ்ப்பெயரா?
இஷ் இல்லாமல் பெயரில்லையா?
இஷ்டம் இல்லாமல் தமிழ்ப்பெயரா?
கஷ்டமில்லாமல் புகுத்திவிட்டார்
நஷ்டமென்றால் அது நமக்கல்லவா?
நஷ்டமென்றால் அது நமக்கல்லவா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

குலத்தினைக் காக்கும் தெய்வங்களும்
மொழியினைக் காக்க மறந்திடுமா?
குலத்தினைக் காக்கும் தெய்வங்களும்
மொழியினைக் காக்க மறந்திடுமா?
நிலத்தினை ஆளப் பிற இனமா?
நாவினை ஆளப் பிறன் மொழியா?
நாவினை ஆளப் பிறன் மொழியா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

(கூடுதலாக இன்னொரு சரணம்)
படகில்லாத பாய்மரமா?
பார்வையில்லாமல் ஓவியமா?
படகில்லாத பாய்மரமா?
பார்வையில்லாமல் ஓவியமா?
நுகர்வில்லாத பூமணமா?
உணர்வில்லாத தமிழினமா?
உணர்வில்லாத தமிழினமா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

பாலா சிவசங்கரன்
26 ஆக 2019


ஒரே ஒரு காரணம்
------------------

மேற்படி எனது பாடலைப் படித்த நண்பர்கள் சிலர், தம் மழலையருக்கு வடமொழிப் பெயர் வைத்துள்ளது குறித்தும் தமிழை விடுத்து இந்தி அல்லது பிற மொழியை இரண்டாவது மொழிப்பாடமாக வைத்துள்ளது குறித்தும் பேசினர் / வருந்தினர்.

குற்றம் சாற்றுவதும் குற்ற உணர்ச்சி கொள்வதும் எனது நோக்கமல்ல. எனது பாடல் இன்றைய நிலையை எடுத்துரைக்கிறது. இன்றைய நிலையின் புரிதலுடன் மேல் நகர்வோம். இது வரை செய்த தவறுகளை அடுத்த ஒரு தலைமுறைக்குள் சரி செய்ய முயல்வோம் முனைப்பாக.

25 ஆண்டுகளுக்கு முன் "உங்கள் பிள்ளையை தமிழ் வழியில் கற்பிப்பீர்களா ஆங்கில வழியிலா?" என்ற விவாதம் இருந்தது. இப்போது "தமிழ் மொழியை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பீர்களா? மொழிப்பாடம் அவசியமா என்ன?" என்று கேட்கும் அளவிற்கு மொழித் தேய்வு நிகழ்ந்துள்ளது. இதுதான் ஒரு தலைமுறையில் நாம் கண்டுள்ள மாற்றம்.

பெயரில் தமிழில்லை என்ற கருத்து இரண்டாம் பட்சமே. அது ஒரு அவா என்ற அளவில் எடுத்துக்கொண்டு முதன்மையான பிரச்சினைக்கு நகர்வோம். தமிழகப் பள்ளிகளில் தமிழ் என்பது ஒரு மொழிப்பாடமாகக் கூடக் கற்பிக்கப்படுவது மறுக்கப்படுகிறது (அல்லது தமிழ் மொழியைப் பயிலாமலேயே ஒரு மழலையின் கல்வித்தேர்ச்சி சாத்தியமாகிறது) என்பதே நாம் முதலில் சரி செய்ய வேண்டியது.

தமிழ் மொழியைக் கற்பதால் பிள்ளைகளின் வருங்காலத்துக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளைகள் படிக்கும் கணிதம் அறிவியல் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுவது போலவே தமிழ் மொழியும் நிச்சயம் பயன்படும் என்பதை சிறியதொரு அக ஆய்வில் நாம் அனைவருமே உணரலாம். வாழ்வின் எத்தகைய ஒரு சூழலுக்கும் ஒரு குறள் விடையாக அமைகிறது. ஒப்புக்கொள்கிறீர்களா? பாரதியின் பாடல்கள், பண்டைய தமிழ் நூல்கள் அனைத்திலும் எத்தனையோ அறிவார்ந்த சிந்தனைகள் அழகின் வெளிப்பாடுகள் பொற்குவியல்களாகக் குவிந்துள்ளன. ஒப்புக்கொள்கிறீர்களா? இச்செல்வங்களைத் துறப்பதென்பது சொந்த நாட்டிலேயே அகதியாவதற்கு ஒப்பாகும். பாடுபட்டு நம் முன்னோர் தேடிச் சேர்த்த மொழிச்செல்வங்கள் அனைத்தையும் புதைத்துவிட்டு ஏழைச் செல்வந்தராய் இறப்பது அறிவுடையோர் செயலா?

இச்செல்வங்களைத் தொடர்ந்து உரிமை பாராட்டுவதையும், துய்த்து மகிழ்வதையும் நமது வருங்கால சந்ததிகள் இழந்துவிடக் கூடாது என்ற ஒரு காரணம் போதாதா நம் பிள்ளைகளுக்கு நாம் தமிழ் பயிற்றுவிக்க?

Wednesday, July 24, 2019

மெல்ல நட மெல்ல நட - remix


It is raining in Chennai. Ride your bikes safely.


ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
காணவில்லை அதன் பெயர் தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
சமிக்ஞையை அவர்தான் மதிப்பார்
அதை மீறிச்சென்றால் அவர் சபிப்பார்
அதை மீறிச்சென்றால் நம்மைச் சபிப்பார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
உயிருக்கும் இங்கில்லை மதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

Tuesday, July 9, 2019

யாருக்காக இது யாருக்காக?

யாருக்காக இது யாருக்காக?
எங்கள் காவிரி அகண்ட காவிரி
நீரும் இன்றியே வறண்ட காவிரி
யாருக்காக இது யாருக்காக?
தாகமே போ... போ....
மேகமே வா.... வா....

மலைகள் மீது மழை பொழிந்தது
அது அருவியாகி அழகு தந்தது
சொர்க்கமாக நதியும் பாய்ந்தது
இன்று நரகமாகக் காய்ந்து விட்டது

மலர்கள் தானே நாம் வளர்த்தது
அந்த மலர்கள் இன்று ஏன் உதிர்ந்தது?
குயில்கள் தானே நாம் ரசித்தது
அந்தப் பறவை இன்று ஏன் மறைந்தது?

எழுதுங்கள் நதிநீர் சாசனத்தில்
நதிகள் பூமியின் உடைமை என்று
பாடுங்கள் உலகம் முழுதும் சென்று
உழவு மானிடக் கடமையென்று

உழவு செய்து நாம் பிழைத்தது
அந்த உழவு இன்று ஏன் கசந்தது?
பயிர்கள் காய்ந்து நாம் தவிப்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது

தொன்றுதொட்டு இங்கு வந்தது
அதில் என்றிருந்து பங்கு வந்தது?
அங்கிருந்து ஆட்சி செய்பவர்
தினம் ஆடுகின்ற நாடகம் இது

Wednesday, March 13, 2019

போவோமா ஊர்கோலம் in English


Lyrics: Gangai Amaran
Translation: Bala Sivasankaran

(Pallavi)
F: 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 
Flowing ponni river 
singing hundred numbers... 
Lovely scene is a pleasure 
Life like this is a treasure 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 

(Charanam 1)
M: 
Can you ever imagine a princess walking barefoot here?
This isn't fair.. this is isn't fair 

F: 
Can I ever experience the pleasure of the snow and sun? 
I couldn't there.. I couldn't there 

M: 
Can you ever give up your comfortable palace and then 
live in a hut.. live in a hut ?

F: 
Can I ever soak up in the fresh air in a mighty palace?
I wouldn't get... I wouldn't get 

M: 
How can you let go your red carpet? See here a lot of potholes 

F: 
I for sure enjoy the grass carpet laid on the lovely field bunds 

M: 
You must be a crazy girl !

F: 
No no I  am a desi  girl !

(Pallavi)
F: 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 
Flowing ponni river 
singing hundred numbers... 
Lovely scene is a pleasure 
Life like this is a treasure 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 

(Charanam 2)
F:
Water falling from the mountain naughty little sparrow singing
What a wonder.. What a wonder

M:
Wild is ur imagination unnecessary admiration
You should ponder what to wonder

F:
Sparkles in the river so bright, what a wonder beautiful sight
There you see pearls There you see gems

M:
What is going on in your mind, I am getting dizzy in my head
I can never understand you

F:
River girl Cauvery recites and decides to dance to the rhythm

M:
Sluice gates hundreds can never be able to hold in her mayhem

F:
Don't go on hey you must stop

M:
I'm gonna go hey you too stop

(Pallavi)
F: 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 
M:
Flowing ponni river 
singing hundred numbers... 
F:
Lovely scene is a pleasure 
Life like this is a treasure 
M: 
Shall we go in a procession? 
F:
Shall we see the world's cross section? 



Friday, December 2, 2016

டேக் இட் ஈஸி பாலிசி

A R ரஹ்மானின் கீழ்க்கண்ட Face Book பதிவிற்கு எனது முயற்சி :
Dear friends, I'm trying to rearrange 'Take it Easy Urvasi' for a performance and wish to update the Charanams.
Feel free to contribute.. Ofcourse please do leave out and avoid any reference to Hilary Clinton, Donald Trump or the currency situation for now and try to come up with something interesting & humorous in the same scaling of the original Tamil version..
------------------------------
(சிறிய மழலைகள்)
Fridge-ல் வைத்த தாய்ப்பால் கிடைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
பிஞ்சு உடம்பில் Flu shots கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி

(பள்ளி மாணவர்)
Geometry Box-ஐ அண்ணனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி
Zoology teacher long leave போனால் டேக் இட் ஈஸி பாலிசி

(கல்லூரி இளைஞர்)
அடிக்கடி வீட்டில் உப்புமா செஞ்சா டேக் இட் ஈஸி பாலிசி
Arrears clear பண்ண அப்பாம்மா கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி

(அலுவலகத்தில்)
ஜிம்முக்குப் போயி நண்பனும் இளைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
ஜம்முன்னு ஆன்சைட் எனிமியும் போனால் டேக் இட் ஈஸி பாலிசி

(NRI)
Statue போல் Beauty - Break up சொன்னால் டேக் இட் ஈஸி பாலிசி
Statue of Liberty Torch Light கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி

(முதியவர்கள்)
Skype-ல் பேசப் பேத்தியும் மறுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
Wife பேச்சைப் பையனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி

Friday, October 9, 2015

என்னிலே பாதியில்லை

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ..." என்று பாடிக் கொண்டிருந்த என்னை, 'காதலிக்கு பதில் மனைவியின் பிரிவாற்றாமையில் பாடும் பாடலாக இதைப் பாடக்கூடாதா?' என்று ஒருவர் கேட்டுவிட்டார். 

நமக்குதான் ரீமிக்ஸ் செய்வது அல்வா சாப்பிடுவது ஆயிற்றே... 
மனித குலத்தின் பாதியான மனைவி குலத்திற்கு இந்தப் பாடலைச் சமர்ப்பிக்றேன்

-------------------------------------------------------------------------------------------------------
வண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ
என்னிலே பாதியில்லை. உன்னைத்தொட ஏணியில்லை

பக்கத்தில் நீயும் இல்லை. பால் பழங்கள் இனிக்கவில்லை
சொந்தமாய் சமைக்கவில்லை.. சாதமும் மீதமில்லை.. 
HSB -யில் ருசியுமில்லை சங்கீதாவில் சுவையுமில்லை
அன்னை அரவிந்தரிலும் உன் கையின் மணம் காணவில்லை
நீயும் வந்து சேர்ந்துவிட்டால் உப்பு காரம் குறைவதில்லை

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
அம்மா வீடு சென்றுவிட்டால் ஏம்மா என்னை நினைப்பதில்லை?
சும்மாவாச்சும் என்னையழைத்து பேசவுமா நேரமில்லை?
வீடு வந்து சேர்ந்த பின்னே வைய மட்டும் மறப்பதில்லை 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
என்னிலே பாதியில்லை உன்னைத்தொட ஏணியில்லை
----------------------------------------------------------------------------------------------- 

பி.கு:தனது பாடலை இப்படி உட்டாலக்கடி செய்து எழுதிய எனக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் ஏதேனும் பரிசு கொடுப்பாரா என்று யாரவது கேட்டுச் சொல்லுங்கள்!

Tuesday, December 2, 2014

மாங்குயிலே பூங்குயிலே - ஆங்கிலமாக்கம்


image source: internet

Hey you Cuckoo
Here you look
Tell me when I ask
Why is our marriage date
Getting very late?
You are like an Idol
I am circling, I’m not idle


இந்த மான் எந்தன் சொந்த மான் – ஆங்கிலமாக்கம்


image source: internet

This deer
My own dear
Oh.. have no fear
Baby, come here
You look at me, then, I catch fire
You are a live wire
I run like a tyre and come near
To take you dear..
It’s happy New Year.. hey hey
It’s a happy New Year

Thursday, October 23, 2014

ராஜகீதம் - கீரவாணி

இன்று நான் கேட்டு ரசித்த பாடல் 'பாடும் பறவைகள்' படத்திலிருந்து 'கீரவாணி'

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ...
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி

க ரி ச ப ம க ப நி ....
ச ரி க ரி க ச நி ப ...
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி....
தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்

1. முதல் interlude-ல் வரும் வயலின் இழைப்பு வேறு எந்தப்பாடலிலும் இல்லாத பிரமாதம்

2. அதே interlude-ல் ஸ்வரம் சொல்கையில் ச ரி க ரி க ச//// நி ப//// என்று சொல்லிவிட்டு ////நீ பா////ர்த்ததால் என்று சரணத்தைத் துவக்குவது அதி அற்புதம். ராஜா/வைரமுத்து சிந்தனை.