Showing posts with label இசைஞானி. Show all posts
Showing posts with label இசைஞானி. Show all posts

Tuesday, June 2, 2020

HAPPY BIRTHDAY RAJA SIR

(முத்தைத்தரு - திருப்புகழ் பாடல் மெட்டில் )
 
வித்தை பல கற்றுக் கலைமகள் மெச்சத்தகு புத்திக்கு அதிபதி
தித்தித்திடும் மெட்டுத் தரவல்ல இசைஞானி
எட்டுத் திசை பட்டத் தமிழரின் இட்டத்தினில் நித்தம் நிலவிடும் 
மட்டத்துயர் தட்டில் திரவியம் இசைஞானி
 
பட்டிக்கொரு கட்டிக்கரும்பென சிட்டிக்கொரு சீனிக்கழியென
எட்டுத்திசை எங்கும் இனித்திடும் இசைஞானி
பட்டப் பகல் முட்டும் குளிர்ந்திட கொட்டும் பனி மெட்டில் மகிழ்ந்திட
எட்டும் இருள் மட்டும் துணைவரும் இசைஞானி
 
கெட்டும் மனம் முற்றும் நலம்பெற ஒட்டும் உயிர் ஊனில் நிலைபெற 
கொட்டும் உயிர் மெட்டில் குருதியில் இசைஞானி 
பட்டத் துயர் எட்டிச் சிதறிட பக்தர்க்கருள் கொட்டித் தருகிற
கிட்டத்தினில் கிட்டும் இறைவனும் இசைஞானி 
 
இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
 
பாலா சிவசங்கரன்
02 ஜூன் 2020
=====-----=====-----=====


Monday, August 17, 2015

ப.பி: கரையெல்லாம் செண்பகப்பூ

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவல் படித்தேன்.
அவரின் வழக்கமான விறுவிறு கிளுகிளு பாணியில் எழுதப்பட்ட நாவல். ஆனால் வித்தியாசமாய் கிராமத்துச் சூழலில் அமைந்த மர்மக் கதை. நாயகன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு கிராமத்துக்கு வருகிறான் என்பதால் சுஜாதா தனது முன்னுரையில் வானமாமலை அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அவர் புத்தகத்திலிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களை இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார்.

அந்தப்பாடல்களில் இரண்டு எனக்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நினைவுபடுத்தின. அதைப் பகிரவே இந்தப் பதிவு ..

1. மாமரத்துக் கீழே நின்னு
மங்கை குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இரை உண்ணாது.

பரிவு காட்ட ஏதோ ஒரு உயிர் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.. எல்லா காலத்திலும்.. அது நாய் பூனை என்ற வளர்ப்புப் பிராணி மட்டும் இல்லாமல் - மாமரத்து மயிலாகவும் இருக்கலாம் என்பதே இந்தப் பாடலின் சிறப்பு.

இந்த நாட்டுப்புறப் பாடல் நினைவு படுத்தும் இசைஞானியின் பாடல் "மாங்குயிலே பூங்குயிலே" என்று நான் சொல்லவும் வேண்டுமோ? " மாமரத்துக் கீழிருந்து மங்கை அவள் குளிக்க அந்த மாமரத்து மேலிருந்து புலம்புவது யாரு?"

2. திருச்செந்தூர் ஓரத்திலே
விரிச்சதலைப் பாலத்திலே
விரும்பிச்சொன்ன சத்தியங்கள்
வீணாகப் போகுதையா...

என்ற இன்னொரு நாட்டுப்புறப்பாடல் எனக்கு "ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி.." என்ற பாடலின் மெட்டை நினைவு படுத்தியது.

Thursday, October 23, 2014

ராஜகீதம் - கீரவாணி

இன்று நான் கேட்டு ரசித்த பாடல் 'பாடும் பறவைகள்' படத்திலிருந்து 'கீரவாணி'

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ...
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி

க ரி ச ப ம க ப நி ....
ச ரி க ரி க ச நி ப ...
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி....
தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்

1. முதல் interlude-ல் வரும் வயலின் இழைப்பு வேறு எந்தப்பாடலிலும் இல்லாத பிரமாதம்

2. அதே interlude-ல் ஸ்வரம் சொல்கையில் ச ரி க ரி க ச//// நி ப//// என்று சொல்லிவிட்டு ////நீ பா////ர்த்ததால் என்று சரணத்தைத் துவக்குவது அதி அற்புதம். ராஜா/வைரமுத்து சிந்தனை.