Showing posts with label கீர்த்தனை. Show all posts
Showing posts with label கீர்த்தனை. Show all posts

Saturday, October 26, 2013

விநாயகா நின்னு வினா ப்ரோச்சுடகு

நானும் என் மகனும் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மேற்படி கீர்த்தனையைப் பின்பற்றி கீழ்க்கண்ட பாடலை எழுதியுள்ளேன். இது நேரடி மொழிபெயர்ப்பன்று. கீர்த்தனையின் பொருளும் எனக்குத் தெரியாது. இந்தத் தமிழ் வடிவம் எவ்வாறு உள்ளது என்று உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

விநாயகா நின்னை
வினாடியும் மறவேன்
வீரம் அருள்வாய்
வெற்றி தருவாய்

அனாதை இல்லை நான்
நீயே காப்பாய்
ஆதரித்து என்னை
நல்லிடம் சேர்ப்பாய்

பரமேச நேச பார்வதி புதல்வா
பாலசுப்ரமண்யன் பாடலில் முதல்வா
கரி முக கண நாயகா
கரி முக கண நாயகா
கரி முக கண நாயக குண நாதா

காதலோடு என்னைக்
காவல் செய் வா வா

விநாயகா நின்னை
வினாடியும் மறவேன்
வீரம் அருள்வாய்
வெற்றி தருவாய்