Thursday, February 23, 2012

பாலாறு

எனது பாட்டன் காலத்திலும் 
பாலாற்றின் கரையில்தான் 
எங்கள் ஊர் சுடுகாடு.

என் காலத்தில்,
எங்கள் ஊர் சுடுகாட்டின் அருகில்
செத்துக் கிடக்கிறது பாலாறு.

வட்டமிட்டு, வட்டமிட்டு,
பிணந்தின்னும் கழுகுகளாய்
மணல் லாரிகள்.

Tuesday, February 7, 2012

மானிட இலக்கணம்

சூடான சோறும் ஆறிய சொற்களும் படைப்பவரே அன்னை; மனைவி
கொஞ்சம் பணமும் கொஞ்சும் மனமும் கொண்டவரே தகப்பன்; கணவன்
இருப்பதைச் சொல்லி இல்லாததைக் கொடுப்பவரே குரு
தன்னை உணரத் தன்னை உணர்த்துவதே தெய்வம்
அறியும் விழிகளும் ஆற்றும் விரல்களும் வளர்ப்பவரே வளரும் பிள்ளைகள்
அழைக்காமல் வந்து பழிக்காமல் செல்பவரே உறவும் நட்பும்
மனிதனாய் வாழ்ந்து மிருகத்தையும் நேசிப்பவரே மனிதர்