Friday, July 23, 2021

REMIX இது. ORIGINAL எது? #7

 REMIX இது. ORIGINAL எது? #7


ஆயிரம் கிளிகளே அமருங்கள்

விழுதில் ஊஞ்சல் ஆடுங்கள்; பாடுங்கள்

கனிகள் நூறு காணுங்கள்

இலைகளும் இறகைப்போல்

பசுமை வண்ணம் பாருங்கள் பாருங்கள்


Found the following video to be a good fit for above lines. Thanks to the video creator.

https://youtu.be/alvuVpb8Ydk


Tuesday, July 20, 2021

REMIX இது. ORIGINAL எது? #6

REMIX இது. ORIGINAL எது? #6

மண் பாடும் பாடல்:

பல்லவி, இந்த ரீமிக்ஸ் பாடலின் கருத்துக்கும் பொருந்துவதால் அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

(சரணம்)

பருவம் பொய்த்துப் போகும் போது

பயிரும் அழுகின்றது

பருவம் தவறிப் பொழியும் போது

பயிரும் அழிகின்றது

என்ன நினைத்து என்னைக் கெடுத்தான்

மனிதன் என்பவனே

மண்ணைக் கெடுத்து தன்னை வளர்த்த

மனிதன் கொடியவனே


Monday, July 12, 2021

REMIX இது. ORIGINAL எது? #5

 REMIX இது. ORIGINAL எது? #5


இதில் கண்டு பிடிக்க ஒன்றும் இல்லைங்க. எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான். மீளாற்றலூற்றுகளைப் (renewable sources of energy) போற்றும் எண்ணத்தில் எழுதியுள்ளேன்.

*****

ஆத்தாடி காற்றால(லை) காத்தாட ...

காற்றால இறகெல்லாம் கூத்தாட ....

காத்தாட அது கூத்தாட...

கொதிக்குது பூமி வேர்த்து... ஏ...

அதக் கொஞ்சம் ஆத்து ஆத்து...


கொடி மலர் மேவும் குளிர்க் காற்றும் விலகாதோ? 

அது காற்றாலை இறகோடு சுழலாதோ?

விலகாதோ... வந்து சுழலாதோ?

கரியமில வாய்வாலே பல தோஷம் தான்

அதனாலே பாழாச்சு பல தேசம் தான்

இந்த பூலோகமே...எஎஎஏ ஏஏஏ...

துருவங்கள் உருகாமல்

கடல்மட்டம் உயராமல்

நகரங்கள் முழுகாமல் காப்பாற்றுவோம்..

Sunday, July 11, 2021

REMIX இது. ORIGINAL எது? #3,4


3.

நீரில்லாமல் நாடில்லை

தானே பயிர்கள் வளர்வதில்லை

நதிகளை யார் தடுக்கின்றார்?

அடுத்தவர் வயிற்றில் அடிக்கின்றார்..


4.

ஆறிருக்கும் அணையிருக்கும்

கடந்து வராது

குடகினிலே நதி பிறக்கும்

குடந்தை வராது

நாலு வகைப் பயிர் வளர்க்கும்

ஆசை விடாது 

நஞ்சை நிலம் தஞ்சையிலே தழைக்க விடாது



Saturday, July 10, 2021

REMIX இது. ORIGINAL எது? #2

 REMIX இது. ORIGINAL எது? #2


நட்டால் மரம் வளரும்

நடாமல் நாம் மறந்தோம்

விட்டால் நீர் சுரக்கும்

விடாமல் நாம் அகழ்ந்தோம்

மனிதன் தொடாமல் உலகில் எந்நாளும் இயற்கை கெடுவதில்லைவ

ளங்கள் கெடாமல் வளர்ச்சி உண்டானால் உயிர்கள் அழிவதில்லை

REMIX இது. ORIGINAL எது? #1

REMIX இது. ORIGINAL எது? #1 

ரீமிக்ஸ் கவிஞர்களின் அவஸ்தைகள் பற்றி சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். எந்த வரியைப் படித்தாலும் கேட்டாலும் அதை ஒரு பாடலின் ட்யூனில் பொருத்திப் பார்ப்பது என்பதுதான் அந்த அவஸ்தை. 

அதே போல் எந்த ஒரு நல்ல பாடலைக் கேட்டாலும் இந்த ட்யூனுக்கு இன்னும் சிறப்பாக நான் எழுதுவேனாக்கும் என்று வரிந்து கட்டுவது இவர்களின் இன்னொரு அவஸ்தை. இதில் பெரும்பாலும் கிடைப்பது தோல்வியே! வாலிக்கும் வைரமுத்துவுக்கும்  tough கொடுக்க நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான செயல் என்பதை இவர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை. உதாரணமாக கவிச்சிற்பி கங்கை அமரன் (நான் கொடுத்த பட்டம் தானுங்க. நல்லா இருக்கா?) அவர்கள் எழுதிய "மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?" என்ற அற்புதமான பாடலைக் கெடுத்து "கண்ணில் இந்தப் பார்வையின்றி யாரும் பார்த்தல் கூடுமோ?" என்று அற்பமாக எழுத ஆரம்பிப்பார்கள்! இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் இவர்கள் இந்த அற்ப முயற்சிகளை அற்பம் என்று புரிந்து கொண்டு கமுக்கமாக trash  செய்து விடுவதுதான்!

Recycling the waste என்ற உயரிய நோக்கில்  எனது trash folder-லிருந்து சில remix முயற்சிகளை இங்கு எழுதி, original பாடலை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று விளையாடலாம் என்று தோன்றியது. விளையாட்டு பிடித்திருந்தால் தொடரலாம்.

கீழ்க்கண்ட remix-ன் original பாடல் எது?

"கண்டதும் கொன்றானடி பாவி

புல்லட்டையே எடுத்து...

Gun-க்குள்ளே தொடுத்து...

கண்டதும் கொன்றானடி"

முதல் போட்டி என்பதால் எளிமையாக ஆரம்பிப்போம்!

Wednesday, July 7, 2021

REMIX அவஸ்தைகள்

என்னைப் போன்ற ரீமிக்ஸ் கவிஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டு. எங்காவது, ஏதாவது ஒரு வரியைப் படித்துவிட்டாலோ கேட்டுவிட்டாலோ, உடனே ஒரு திரைப்படப் பாடல் மெட்டு flash ஆகிவிடும்! அதை வைத்து ஒரு ரீமிக்ஸ் எழுத ஆரம்பித்து விடுவோம்!

அப்படித்தான் இன்று ஒரு பழ வண்டியில் "ஏசுவின் ரத்தம் ஜெயம்" என்ற வாசகத்தைப் படித்ததும் மனதில் ஒரு பழைய பாடல் flash ஆனது. 

உங்களுக்கு இந்த வாசகத்தைப் படித்தால் ஏதாவது பாடலின் மெட்டு  flash ஆகிறதா? 

எனக்குத் தோன்றிய பாடலைக் கமெண்ட்டில் பின்னர் எழுதுகிறேன்.