Thursday, October 14, 2021

கட்டுக்குள் அடங்காதவை

 செரிமானமாகாத அவமானங்களை 

அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே

புதிதாய் ஒன்று நிகந்துவிட

தூரவரிசையில் மேலும் பல நிற்பதுபோல்

துணுக்குற்று ஒடுங்குகின்றது மனம்


பொறுமை எனும் ஆமை ஓடு

கவசமா இல்லை அவமானமா?

என்ற கேள்விக்கு

சுமை என்று வருகின்றது விடை


ஊர்-வதை அஞ்சி ஊர்வதை

வீழ்ச்சியென்றால் வருத்தம் வரக்கூடும்.

பதுங்குதலென்று கொள்வோம்...


மடித்து எழுதிய கட்டுக்குள் அடங்காத

காயங்களைக் காட்டவும் முடியாமல்

மறைக்கவும் முடியாமல்

தவிக்கின்றன வரிகள்

-பாலா சிவசங்கரன்

14 10 2020

Sunday, October 3, 2021

REMIX இது. ORIGINAL எது? #12

 பாலாற்றின் கரையிலே

வெகு நாளாக மரமொன்று

அதன் வேரும் புண்ணானது

சுடும் மண்ணில் திண்டாடுது


அங்கே ஒரு பாலம்

ஆற்றைத் தாண்டிப் போகும்

இங்கே இது பாவம்

நீருக்கெங்கே போகும்?

பூமிக்குள்ள இல்லாதத

வானத்திடம் மன்றாடுதோ?

காற்றுக்குள்ள இல்லாதத

கடலில் எடுக்க வாதாடுதோ?

வானம்‌ காயுது

அதுதானே பொழியுது?

மரமும் காயுது

அதுதானே காய்க்குது?

மரம் இன்றி நிழல் ஏது?

மணல் இன்றி நதி ஏது?

Saturday, September 25, 2021

புரட்டாசி புலம்பல்

(சிவகாமி நெனைப்பினிலே மெட்டு)

மனைவி: பிரியாணி நெனைப்பினிலே சாதம் தின்ன மறந்ததென்ன?

கணவன்: புரட்டாசி மாசத்திலே நான்வெஜ் செய்ய மறுப்பதென்ன?Drum-க்குள்ளே தட்டுவியே... மண்வெட்டிபோல் வெட்டுவியே...

மனைவி: கொஞ்சம் பொறுத்துக்கோ புலம்பலை நிறுத்திக்கோ.. மாசம் முடிஞ்சதும் மாமிசம் எடுத்துக்கோ..

சரணம்-

கணவன்: மாலை முடிஞ்சாலே பாலைத் தயிராகத் தோய்க்கிற... உறை ஊத்துற... காலை விடிஞ்சாலே காயைக் கறியாக ஆக்குற கடுப்பேத்துற...

மனைவி: சான்ட்விச் கொடுத்தாலே ஆம்லெட் தரச்சொல்லிக் கேக்குற... என்ன பாக்குற...? காயை நறுக்காமல் டீயை வடிக்காமல் ஏய்க்குற... டபாய்க்குற....

கணவன்: போதும் இது போதும் எந்தன் வேதனை உனக்கிங்கு புரியாதா? மாதம் ஒரு மாதம் அதன் பெயரினை மாற்றிட முடியாதா?

மனைவி: தம்ம் கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ... தம்ம் ஆனதும் வெட்டிக்கோ வெட்டிக்கோ !!



Saturday, September 18, 2021

REMIX இது. ORIGINAL எது? #11

தாய் மடியில் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கன்னுக்குட்டி

அடடா முட்டுது மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மல்லுக்கட்டி

நாளெல்லாம்.... 

பசு மேய்ந்தாலும்....

பாலெல்லாம்.... 

மடி சேர்ந்தாலும்...

அடி அம்மா மொத்தமும் தான் 

தினம் சந்தைக்குச் சென்றதம்மா

பசியில்---

தாய் மடியில் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கன்னுக்குட்டி

அடடா முட்டுது மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மல்லுக்கட்டி


#VeganSong

Friday, August 27, 2021

REMIX இது. ORIGINAL எது? #10

 அன்னையென்று வந்தவளே

ஆருயிரைத் தந்தவளே

ஆதரிக்க யாருமின்றி

தன்னந்தனி ஆனவளே

கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தவர்கள்

உன் நெஞ்சைப் பிளந்ததும் ஏன்?

அன்னை அஞ்சிக் கிடக்கணுமோ?

உயிர் எஞ்சிப் பிழைக்கணுமோ?

இந்த பூலோகம் பாழாகிப் போனதோ?

அந்த மேலோகம் மேலாகத் தோணுதோ?

Saturday, August 21, 2021

ஒரு வெங்கலப் பானைக்குள்ளே!

 

https://youtu.be/MW9eSckmiA4

ஒரு வெங்கலப்  பானைக்குள்ளே
வெண்பொங்கலும் வேகையிலே....!
அந்த சந்தடிச் சாக்கினிலே
இங்கு முந்திரி காணலையே
கடைக்குச் சென்று முந்திரியை வாங்கிடும் வேளையிலே
பருப்பும் வெந்து பொங்கலும் தான் குழையுது பானையிலே
சொந்த பந்தம் வாரீரோ
சுடும் பொங்கல் உண்ண வாரீரோ..?!
நாட்டுப் பசு நான் கறந்து
பாலைக் காய்ச்சித் தானே நெய் எடுத்தேன்; நெய் எடுத்தேன்
நானெடுத்த நெய்யினிலே நாலு அஞ்சு ஸ்பூனை நானும் விட்டேன்
நானும் விட்டேன்
அம்மாடி தாளிப்பின் வாசம் இங்கே நாசியை விட்டு நீங்கிடுமோ?
அஞ்சாறு மணிநேரம்  நெய்யின் வாசம் நாவினை விட்டு நீங்கிடுமோ?
கொதிக்கின்ற பொங்கல் விரைவில் ஆறாதோ?
ருசிக்கின்ற பெண்கள் விரலும் நோகாதோ?
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
நிழலைப்போலே உள்ள மிளகை மென்று பாரு காரத்தெ காரத்தெ!

Friday, August 20, 2021

REMIX இது. ORIGINAL எது? #9

இயற்கையும் மீளுமோ...?செயற்கையும் ஓயுமோ...?இதுவரை அழித்தது அது மட்டும் போதும் இருக்கட்டும் மீதம்

கல்லாகும் குறிஞ்சி

முள்ளாகும் முல்லை

மண்ணாகும் மருதம்

நஞ்சாகும் நெய்தல்

வளமான பூமி

அதுவாகும் பாலை

நலமாக நாளை

விடியாதோ காலை?

போனது போகட்டும்

ஏனிந்தத் துன்பம்?

மீண்டும் வேண்டும் இன்பம்.

Thursday, August 19, 2021

REMIX இது. ORIGINAL எது? #8

 

மரகத வானம்

மகரந்த மேகம்

மரங்களின் தாகம்

மண்மீது தீர்க்கும்


தகுந்த காலத்தில் தருகின்ற தானம்

தயை நீ புரிந்தால் தழைத்திடும் யாவும்

மழையெனும் அமுதமும் கரும்பினில் சேரும்

எந்திர லோகத்தில் சர்க்கரை ஆகும்!

Monday, August 9, 2021

மனிதன் ஏமாந்தான்

(கம்பன் ஏமாந்தான் பாடலைத் தழுவி. நன்றி: கவியரசர்)


மனிதன் ஏமாந்தான் இந்த உலகத்தையே அவன் தனதென்றானே கற்பனை செய்தானே... மனிதன் ஏமாந்தான்.


கம்பு கழி என்று ஏன் கொண்டான்? பிற உயிர்களை வதைத்தானே... அவன்

ரம்பங்கள் கோடரி ஏன் செய்தான்? தினம் மரங்களை அறுத்தானே


தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ? அந்த

தீபத்தினால் ஒரு கானகம் எரித்தால்

தீபமும் பாபமன்றோ?


வேடர்கள் உழவர் பல தொழில் செய்வோர் சமநிலை சிதைத்தாரே அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் சேர்ந்தேனே...


ஆத்திரமென்பது மனிதனுக்கென்றும் அடங்கவே அடங்காதோ?

அவன் ஆதிக்கத்தால் மண்ணில் பாதிப்பு வந்தால் அடங்குதல் முறைதானே?

-பாலா சிவசங்கரன்

 10 ஆகத்து 2021



Tuesday, August 3, 2021

மொச்சை விழி!

பெண்: பச்சைத் தமிழா, பச்சைத் தமிழா,
பசைபோல் உனை நான் ஒட்டிக்கொள்ளவா?
ஆண்: மொச்சை விழியே, மொச்சை விழியே,
மசிபோல் உன்னை நான் தொட்டுக் கொள்ளவா?

பெண்: உச்சிக் கிளையே,  உச்சிக் கிளையே 
கனிபோல் உன்னில் நான் ஒட்டிக் கொள்ளவா?
ஆண்: இச்சைக் கனியே, இச்சைக் கனியே 
கிளிபோல் உன்னை நான் கொத்திச் செல்லவா?

ஆண்: செப்புச்சிலையே, செப்புச்சிலையே
செப்ப ஒரு செய்யுள் நான் சொல்லித் தரவா?
பெண்: மெச்சும் கவியே, மெச்சும் கவியே,
கச்சையென உன்னை நான் கட்டிக் கொள்ளவா?!