Monday, August 9, 2021

மனிதன் ஏமாந்தான்

(கம்பன் ஏமாந்தான் பாடலைத் தழுவி. நன்றி: கவியரசர்)


மனிதன் ஏமாந்தான் இந்த உலகத்தையே அவன் தனதென்றானே கற்பனை செய்தானே... மனிதன் ஏமாந்தான்.


கம்பு கழி என்று ஏன் கொண்டான்? பிற உயிர்களை வதைத்தானே... அவன்

ரம்பங்கள் கோடரி ஏன் செய்தான்? தினம் மரங்களை அறுத்தானே


தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ? அந்த

தீபத்தினால் ஒரு கானகம் எரித்தால்

தீபமும் பாபமன்றோ?


வேடர்கள் உழவர் பல தொழில் செய்வோர் சமநிலை சிதைத்தாரே அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் சேர்ந்தேனே...


ஆத்திரமென்பது மனிதனுக்கென்றும் அடங்கவே அடங்காதோ?

அவன் ஆதிக்கத்தால் மண்ணில் பாதிப்பு வந்தால் அடங்குதல் முறைதானே?

-பாலா சிவசங்கரன்

 10 ஆகத்து 2021



3 comments:

KILLERGEE Devakottai said...

ஸூப்பர்

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன்.

மோ சி பாலன் said...

மிக்க நன்றி கில்லர்ஜி, தனபாலன், வெங்கட் ������