போர்வையின் விலகலைப்
பறை சாற்றியது
வெளியேறிய பாதக் கொலுசொலி.…
எஞ்சியிருந்த இருட் போர்வையையும்
விலக்கி, வெள்ளிக் கொடி படர்ந்த
கணுக்கால் வெளியை
மேய்ந்து கொண்டிருந்தது
திரைச்சீலை ஒழுகிய ஒளி...
மின்சாரம் குடித்து
போதையில் சுழன்று கொண்டிருந்தது
உன் குழற்கற்றையை
அசைத்த குதூகலத்தில்
மின்விசிறி...
உன் இளஞ்சூட்டு ரத்தத்திற்கு
என்னைப் போலவே
ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது
தொடுவதா வேண்டாமா
என்ற சிந்தனையில் கொசு...
Saturday, August 17, 2013
Tuesday, July 30, 2013
UKG பிரார்த்தனை
எனது நண்பரின் மகன் UKG படிக்கிறான். அவன் LKG படிக்கும்போது "குரு பிரம்மா .. குரு விஷ்ணு" என்ற பாடலைப் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எந்தக் கோயிலுக்குப் போனாலும் சாமியின் முன் நிற்கும்போது இந்தப் பாடலை சத்தமாகப் பாடுவது அவன் வழக்கமாம். பலரும் குழந்தை பாடுவதைப் பாராட்டுவார்களாம்.
இந்த வார இறுதி நண்பர் குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றிருக்கிறார்.
கடவுளின் முன் கை கூப்பிய சிறுவன் சத்தமாகப் பாடத் துவங்கினான்..
"அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்..."
எல்லோர் முன்னாலும் வெட்கமாகிவிட்டது நண்பருக்கு..இந்த நான்கு வரிகளுக்குள் அவன் பாடலை நிறுத்திய நண்பர், "கண்ணா இது சாமி பாட்டு இல்லப்பா" என்றாராம். "எங்க miss புதுசா சொல்லிக் குடுத்தாங்கப்பா.. நான் சாமி பாட்டுன்னு நெனச்சுட்டேன்.. இது என்ன பாட்டுப்பா?" என்றானாம் குழந்தை.
எனக்கென்னவோ இந்த நான்கு வரிகளும் இறைவன் முன் வைக்க வேண்டிய சரியான வேண்டுதல்களாகவே தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Saturday, July 20, 2013
பொண்ணு
பொண்ணு,
உனக்கு முதன் முதலில் நான் வைத்த செல்லப் பெயர் பொண்ணு என்பது உனக்கு நினைவிருக்கிறதா? இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் இந்தப் பெயர் உனக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
நாளை நமக்குத் திருமணம்.... என் மனைவியான உனக்கு உன் காதலனாக நான் எழுதும் ஒரே கடிதம் இது.
நமது நிச்சயதார்த்ததுக்கும் திருமணத்துக்கும் இடையிலிருந்த இந்த ஆறு மாதங்களை நமக்குத் திருமணமான நாட்களாகவே நான் கருதுகிறேன். நீயோ, பெண்ணென்ற பாதுகாப்பு வளையத்திலிருந்து இவற்றை நம் காதல் மாதங்களாகக் கணக்கிடுகிறாய்.
“ஜோசியக் காரன் இதைவிட நல்ல நாள் கிடையாது என்கிறான்...” “கல்யாண மண்டபம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது..” என்பதான காரணங்கள் கூறி நம் கல்யாணத்தைப் பெரியவர்கள் தள்ளிப் போட்டபோது, காய்ந்த காளையான எனக்கு பெருத்த ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது பார்க்கும்போது இந்த ஆறுமாத "arranged" காதல் மிகவும் அருமையாகத் தான் இருந்திருக்கிறது.
இந்த ஆறு மாத காலத்தில் தான் நீ என்னைவிட வெண்மையானவள் மட்டுமல்ல என்னை விட உண்மையானவள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இந்த ஆறு மாத காலத்தில் தான் உனது அன்பின் ஆழத்தை அறிந்து கொண்டேன். ஊடல் நாளொன்றில் என்னிடம் கோபித்து "போங்க... உங்ககிட்ட இனி பேசமாட்டேன்" என்றதும் நான் பதைத்துப் போனேன். "இன்னும் ரெண்டு நாளைக்கு எனக்குப் போன் பண்ணாதீங்க" என்ற போதுதான் புரிந்தது என்னோடு பேசாமால் உன்னால் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது என்று.
உனது கைக்குட்டையில் நீ எம்பிராயிடரி செய்திருந்த சிறு பூக்களைப் பார்த்த பின்புதான் உனது கலையுணர்வும் அழகுணர்வும் எனக்குப் புரிந்தது. கல்யாண நகை வாங்க நமது பெற்றோர்களுடன் கடைக்குச் சென்று திரும்பும்போது பெற்றோர்களை முன்னால் நடக்கவிட்டு உன்னிடமிருந்து கைக்குட்டையைப் பறித்து வந்தது நினைவிருக்கிறதா? நீ செய்த பூக்களினால் அந்தக் கைக்குட்டை ஒரு காதல் சின்னமாகி நான் certificate-கள் வைக்கும் பெட்டிக்குள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது!
அவ்வப்போது நாம் தேனீர் அருந்தும் சரவணபவன் வாசலில் ஒருநாள் "எனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுங்கள்" என்று சொன்னபோது தான் நான் கண்டேன் இந்தக் குமரிக்குள் தவழும் குழந்தை!
கல்யாணத்துக்கு முன்பே (பிரம்மச்சாரியாய் இருக்கும் போதே!) சபரி மலைக்குச் சென்று வரவேண்டும் என்று நான் சென்று வந்தபோது நீ கேட்டாய். "ஐயப்பனிடம் என்ன வேண்டி வந்தீர்கள்?". "என் கண்மணி கேட்கும் வரத்தை அருள்வாய் ஐயப்பா" என்று நான் வேண்டியதைச் சொன்ன போது நீ நம்பினாயா என்று தெரியவில்லை. இப்போதும் சொல்கிறேன் இதுதான் நான் இறைவனிடம் வேண்டுவது. என் நண்பன் சொன்னான் "அடப் பாவி.. தசரதன் மாதிரி வரம் கொடுத்து மாட்டிக்கொள்ளப் போகிறாய்". அவனிடம் சொன்னேன்; உன்னிடமும் சொல்கிறேன், நான் தசரதன் போல் நல்ல கணவனாய் இருக்கவே விரும்புகிறேன்.
இறைவன் தருவது இருக்கட்டும் நீ என்ன தருவாய் என்று கேட்கிறாயா?
"உனது வாய் மொழிக்கு என் செவி தருவேன்
உனது இதழில் என்றும் நகை தருவேன்
உனது தலை சாயத் தோள் இரண்டு தருவேன்
நனையாத தலையணை நான் தருவேன்
இருக்கும் வரையில் என்னைத் தருவேன்
இல்லாத போதும் என் நினைவு தருவேன்"
கவிதையின் மிகைகளை மீறி என் எழுத்துக்களில் ஒளிந்துள்ள உண்மை உனக்குப் புரியும் என்று நம்புகிறேன்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கும் நேரத்தில்தான் இறைவன் அவன் லீலையைக் காட்டினான் அல்லவா? திருமணத்துக்கு ஒரு மாதம் கூட இல்லாதபோது திடீரென எனக்கு முதுகுவலி அதிகமாகி மருத்துவமனையில் படுக்கும்படி ஆகிவிட்டதே. Disc Prolapsed ஆகியுள்ளது. பத்து நாளைக்கு traction போடவேண்டும் என்று டாக்டர் சொன்னபோது நான் மிகவும் பதறிப் போனேன்". வலி அதிகமாக இருந்ததால் நிற்கவும் முடியவில்லை உட்காரவும் முடியவில்லை.. திருமணத்தைத் தள்ளிபோட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ..?"என்று உனக்கு போன் செய்தேன். நீயோ உறுதியாய்.. "அதெல்லாம் ஒன்றும் ஆகாது. முதுகுவலி சரியாகிவிடும் திட்டமிட்ட நாளில் திருமணம் நடக்கும்" என்றாய். அப்போது தான் எனக்குப் புரிந்தது பெண்மையின் மனோபலம் .. பெண்மையின் நம்பிக்கை. அதோடு நிறுத்தாமல் "அப்படியே வலி குறையவில்லை என்றாலும் ரிசப்ஷன் கொஞ்ச நேரம் நின்று adjust பண்ணிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னும் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாதென்று.."டோண்ட் வொரி..ஐ கேன் வெயிட்" என்றாயே என் கண்ணம்மா..விம்மி விம்மி அழுதுவிட்டேன்.
இதோ... இன்று மாலை இக்கடிதத்தைக் கொடுத்துவிட்டு உன்னுடன் கைகோத்து நிற்கப்போகிறேன். வலியெல்லாம் போய்விட்டது..... அண்ட் யூ டோண்ட் ஹேவ் டு வெயிட்!
திருமண வரவேற்பு முடிந்ததும் பரிசுப் பொருட்களைப் புறந்தள்ளிவிட்டு இந்தக் கடிதத்தை நீ படிப்பாய் என்று தெரியும். இது இன்றைக்கான கடிதமன்று என்றைக்குமான கடிதம். புகைப்பட ஆல்பம் பார்ப்பது போல் பின்னொரு காலத்தில் நாமோ நம் பிள்ளைகளோ இக்கடிதத்தைப் படித்து ஒரு சிறு புன்னகை பூத்தோம் என்றால் நம் காதல் வென்றுவிட்டது என்று அர்த்தம்.
நாளை சீக்கிரம் எழ வேண்டும். படுத்துத் தூங்கிவிடு-------இன்றொரு இரவு!
இப்படிக்கு
உனது அன்புக் கணவன் (இதிலும் இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் நன்றாகப் பொருந்துகிறது தானே?)
______________________________________________________________ உனக்கு முதன் முதலில் நான் வைத்த செல்லப் பெயர் பொண்ணு என்பது உனக்கு நினைவிருக்கிறதா? இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் இந்தப் பெயர் உனக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
நாளை நமக்குத் திருமணம்.... என் மனைவியான உனக்கு உன் காதலனாக நான் எழுதும் ஒரே கடிதம் இது.
நமது நிச்சயதார்த்ததுக்கும் திருமணத்துக்கும் இடையிலிருந்த இந்த ஆறு மாதங்களை நமக்குத் திருமணமான நாட்களாகவே நான் கருதுகிறேன். நீயோ, பெண்ணென்ற பாதுகாப்பு வளையத்திலிருந்து இவற்றை நம் காதல் மாதங்களாகக் கணக்கிடுகிறாய்.
“ஜோசியக் காரன் இதைவிட நல்ல நாள் கிடையாது என்கிறான்...” “கல்யாண மண்டபம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது..” என்பதான காரணங்கள் கூறி நம் கல்யாணத்தைப் பெரியவர்கள் தள்ளிப் போட்டபோது, காய்ந்த காளையான எனக்கு பெருத்த ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது பார்க்கும்போது இந்த ஆறுமாத "arranged" காதல் மிகவும் அருமையாகத் தான் இருந்திருக்கிறது.
இந்த ஆறு மாத காலத்தில் தான் நீ என்னைவிட வெண்மையானவள் மட்டுமல்ல என்னை விட உண்மையானவள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இந்த ஆறு மாத காலத்தில் தான் உனது அன்பின் ஆழத்தை அறிந்து கொண்டேன். ஊடல் நாளொன்றில் என்னிடம் கோபித்து "போங்க... உங்ககிட்ட இனி பேசமாட்டேன்" என்றதும் நான் பதைத்துப் போனேன். "இன்னும் ரெண்டு நாளைக்கு எனக்குப் போன் பண்ணாதீங்க" என்ற போதுதான் புரிந்தது என்னோடு பேசாமால் உன்னால் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது என்று.
உனது கைக்குட்டையில் நீ எம்பிராயிடரி செய்திருந்த சிறு பூக்களைப் பார்த்த பின்புதான் உனது கலையுணர்வும் அழகுணர்வும் எனக்குப் புரிந்தது. கல்யாண நகை வாங்க நமது பெற்றோர்களுடன் கடைக்குச் சென்று திரும்பும்போது பெற்றோர்களை முன்னால் நடக்கவிட்டு உன்னிடமிருந்து கைக்குட்டையைப் பறித்து வந்தது நினைவிருக்கிறதா? நீ செய்த பூக்களினால் அந்தக் கைக்குட்டை ஒரு காதல் சின்னமாகி நான் certificate-கள் வைக்கும் பெட்டிக்குள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது!
அவ்வப்போது நாம் தேனீர் அருந்தும் சரவணபவன் வாசலில் ஒருநாள் "எனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுங்கள்" என்று சொன்னபோது தான் நான் கண்டேன் இந்தக் குமரிக்குள் தவழும் குழந்தை!
கல்யாணத்துக்கு முன்பே (பிரம்மச்சாரியாய் இருக்கும் போதே!) சபரி மலைக்குச் சென்று வரவேண்டும் என்று நான் சென்று வந்தபோது நீ கேட்டாய். "ஐயப்பனிடம் என்ன வேண்டி வந்தீர்கள்?". "என் கண்மணி கேட்கும் வரத்தை அருள்வாய் ஐயப்பா" என்று நான் வேண்டியதைச் சொன்ன போது நீ நம்பினாயா என்று தெரியவில்லை. இப்போதும் சொல்கிறேன் இதுதான் நான் இறைவனிடம் வேண்டுவது. என் நண்பன் சொன்னான் "அடப் பாவி.. தசரதன் மாதிரி வரம் கொடுத்து மாட்டிக்கொள்ளப் போகிறாய்". அவனிடம் சொன்னேன்; உன்னிடமும் சொல்கிறேன், நான் தசரதன் போல் நல்ல கணவனாய் இருக்கவே விரும்புகிறேன்.
இறைவன் தருவது இருக்கட்டும் நீ என்ன தருவாய் என்று கேட்கிறாயா?
"உனது வாய் மொழிக்கு என் செவி தருவேன்
உனது இதழில் என்றும் நகை தருவேன்
உனது தலை சாயத் தோள் இரண்டு தருவேன்
நனையாத தலையணை நான் தருவேன்
இருக்கும் வரையில் என்னைத் தருவேன்
இல்லாத போதும் என் நினைவு தருவேன்"
கவிதையின் மிகைகளை மீறி என் எழுத்துக்களில் ஒளிந்துள்ள உண்மை உனக்குப் புரியும் என்று நம்புகிறேன்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கும் நேரத்தில்தான் இறைவன் அவன் லீலையைக் காட்டினான் அல்லவா? திருமணத்துக்கு ஒரு மாதம் கூட இல்லாதபோது திடீரென எனக்கு முதுகுவலி அதிகமாகி மருத்துவமனையில் படுக்கும்படி ஆகிவிட்டதே. Disc Prolapsed ஆகியுள்ளது. பத்து நாளைக்கு traction போடவேண்டும் என்று டாக்டர் சொன்னபோது நான் மிகவும் பதறிப் போனேன்". வலி அதிகமாக இருந்ததால் நிற்கவும் முடியவில்லை உட்காரவும் முடியவில்லை.. திருமணத்தைத் தள்ளிபோட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ..?"என்று உனக்கு போன் செய்தேன். நீயோ உறுதியாய்.. "அதெல்லாம் ஒன்றும் ஆகாது. முதுகுவலி சரியாகிவிடும் திட்டமிட்ட நாளில் திருமணம் நடக்கும்" என்றாய். அப்போது தான் எனக்குப் புரிந்தது பெண்மையின் மனோபலம் .. பெண்மையின் நம்பிக்கை. அதோடு நிறுத்தாமல் "அப்படியே வலி குறையவில்லை என்றாலும் ரிசப்ஷன் கொஞ்ச நேரம் நின்று adjust பண்ணிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னும் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாதென்று.."டோண்ட் வொரி..ஐ கேன் வெயிட்" என்றாயே என் கண்ணம்மா..விம்மி விம்மி அழுதுவிட்டேன்.
இதோ... இன்று மாலை இக்கடிதத்தைக் கொடுத்துவிட்டு உன்னுடன் கைகோத்து நிற்கப்போகிறேன். வலியெல்லாம் போய்விட்டது..... அண்ட் யூ டோண்ட் ஹேவ் டு வெயிட்!
திருமண வரவேற்பு முடிந்ததும் பரிசுப் பொருட்களைப் புறந்தள்ளிவிட்டு இந்தக் கடிதத்தை நீ படிப்பாய் என்று தெரியும். இது இன்றைக்கான கடிதமன்று என்றைக்குமான கடிதம். புகைப்பட ஆல்பம் பார்ப்பது போல் பின்னொரு காலத்தில் நாமோ நம் பிள்ளைகளோ இக்கடிதத்தைப் படித்து ஒரு சிறு புன்னகை பூத்தோம் என்றால் நம் காதல் வென்றுவிட்டது என்று அர்த்தம்.
நாளை சீக்கிரம் எழ வேண்டும். படுத்துத் தூங்கிவிடு-------இன்றொரு இரவு!
இப்படிக்கு
உனது அன்புக் கணவன் (இதிலும் இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் நன்றாகப் பொருந்துகிறது தானே?)
திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக நான் எழுதிய காதல் கடிதம் இது. இதில் கலந்துகொள்ள எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன் மற்றும் KG கௌதமன் இருவருக்கும் எனது நன்றி. இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதி அளிக்கிறேன்.
Saturday, July 6, 2013
சிறு பொன்மணி அசையும் - REMIX
உரல் குழவியும் சுழலும் அதில்
உழலும் பொருள் குழையும்
குழி மேவிடும் மாவது பூப் போல் மலரும்
விரல்கள் தொடவும் தொடரும் தடம் மாறாது
ராகம் தாளம் மாறிடாது ஆடும் கல்லும் பாடலோடு... (உரல் குழவியும்)
படியும் அரைப் படியும் எனக் கலந்தால் சரி விகிதம்
விடியும் வரை இருந்தால் புது மணமே உதயம்
படியும் அரைப் படியும் எனக் கலந்தால் சரி விகிதம்
விடியும் வரை இருந்தால் புது மணமே உதயம்
*அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும்
அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும்
சுவையும் எமைச் சுவையும் என அவையில் அவை கெஞ்சும்
விரல் என் வசம் விருந்துன் வசம் உருவாகிடும் பரவசமே (உரல் குழவியும்)
________________________________________
* அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும் - cotton-like soft Idlis getting baked in steam heat
உழலும் பொருள் குழையும்
குழி மேவிடும் மாவது பூப் போல் மலரும்
விரல்கள் தொடவும் தொடரும் தடம் மாறாது
ராகம் தாளம் மாறிடாது ஆடும் கல்லும் பாடலோடு... (உரல் குழவியும்)
படியும் அரைப் படியும் எனக் கலந்தால் சரி விகிதம்
விடியும் வரை இருந்தால் புது மணமே உதயம்
படியும் அரைப் படியும் எனக் கலந்தால் சரி விகிதம்
விடியும் வரை இருந்தால் புது மணமே உதயம்
*அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும்
அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும்
சுவையும் எமைச் சுவையும் என அவையில் அவை கெஞ்சும்
விரல் என் வசம் விருந்துன் வசம் உருவாகிடும் பரவசமே (உரல் குழவியும்)
________________________________________
* அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும் - cotton-like soft Idlis getting baked in steam heat
Labels:
கவிதை,
மறுகலப்பு(remix)
Thursday, July 4, 2013
பக்கத்து வீட்டுக் குழந்தையின் பசியொலி
என் வீட்டுச் சுவரில் கசிந்தது
பக்கத்து வீட்டுக் குழந்தையின் பசியொலி..
ஏதோ ஒரு அலுவலக
வாஷ் பேசினில் கசிந்தது
அக்குழந்தை குடிக்காத பால்
பக்கத்து வீட்டுக் குழந்தையின் பசியொலி..
ஏதோ ஒரு அலுவலக
வாஷ் பேசினில் கசிந்தது
அக்குழந்தை குடிக்காத பால்
Labels:
கவிதை,
வசன கவிதைகள்
Friday, June 21, 2013
இப்படி இருந்திருந்தால்
என்னிரு கரங்கள் கால்களாகவே இருந்திருந்தால்
உணவினை வாயில் திணித்திருக்க மாட்டேன்.
என் முதுகெலும்பு வளைந்தே இருந்திருந்தால்
இன்றெனது தலைக்குனிவு இயல்பாய் இருந்திருக்கும்.
நானசைத்து ஆட வாலொன்று இருந்திருந்தால்
வாளசைக்கும் விளையாட்டு ஆடியிருக்க மாட்டேன்.
எனக்கறிவு என்றும் ஐந்தாகவே இருந்திருந்தால்
பகுத்தறிவால் பைத்தியம் ஆகியிருக்க மாட்டேன்.
விலங்காக மட்டும் நான் இருந்திருந்தால்
விளங்காத பொருளாய் உலகை மாற்றியிருக்கமாட்டேன்
உணவினை வாயில் திணித்திருக்க மாட்டேன்.
என் முதுகெலும்பு வளைந்தே இருந்திருந்தால்
இன்றெனது தலைக்குனிவு இயல்பாய் இருந்திருக்கும்.
நானசைத்து ஆட வாலொன்று இருந்திருந்தால்
வாளசைக்கும் விளையாட்டு ஆடியிருக்க மாட்டேன்.
எனக்கறிவு என்றும் ஐந்தாகவே இருந்திருந்தால்
பகுத்தறிவால் பைத்தியம் ஆகியிருக்க மாட்டேன்.
விலங்காக மட்டும் நான் இருந்திருந்தால்
விளங்காத பொருளாய் உலகை மாற்றியிருக்கமாட்டேன்
Labels:
கவிதை,
வசன கவிதைகள்
Monday, June 17, 2013
மனம்
வெற்றுத் தாள், வெறும் பாண்டம்,
வெறும் சாதம், வெற்று மரம்...
வெறும் மூளை கூட உண்டாம்.
வெற்றிடமாய் உலகில் எத்தனை
இருந்தாலும்
வெற்று மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?
ஏதோ ஒன்று நிறைந்திருந்தாலும்
நிறைந்த மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?
வெறும் சாதம், வெற்று மரம்...
வெறும் மூளை கூட உண்டாம்.
வெற்றிடமாய் உலகில் எத்தனை
இருந்தாலும்
வெற்று மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?
ஏதோ ஒன்று நிறைந்திருந்தாலும்
நிறைந்த மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?
Labels:
கவிதை,
வசன கவிதைகள்
Saturday, June 15, 2013
செருப்பு
மிதித்தாலும் உதைத்தாலும்
உன் காலின் கீழ்க் கிடக்கிறேன்.
நீ கழற்றி விட்டாலும்
உனக்காகக் காத்துக் கிடக்கிறேன்
உன் வழியே என் வழி....
மலத்தின் மீது நீ நடந்தால்
நாறிப் போவது நான்...
உனது அன்புத் தெய்வங்களுக்கு
ஆகாது என்பதால்
உன் பூசை அறையில்
நான் இடம் கேட்பதில்லை.
வீட்டுக்கு உள்ளேனும் வையேன்..
வெளியில் நாய்கள் தொல்லை.
Labels:
கவிதை,
வசன கவிதைகள்
Friday, June 7, 2013
மழைக் காதலி
குடையின்றி நிற்கும்போது
திடீரென-
உன் கல கல சிரிப்பில்
எனை முழுவதும் நனைத்துப் போனாய்.
என் முரட்டு மேனியிலும் மயில் தோகையென
சிலிர்த்துக் கொண்டன மயிர்க் கால்கள்.
நீ வந்து போன நெடுநேரம் கழித்தும்
மீசையின் மீது ஒட்டிக் கிடந்தது
உன் முத்தம்.
ஒட்டிப் போன ஆடையில் ஒட்டிக்கொண்டு
பிரிக்க விடாமல் ஏன் பிடிவாதம்...?
ஒரு வழியாய் உடல் துடைத்து
புதுத் துணி அணிந்த போது
உடல் முழுதும் பூசிக் கிடந்தது
உன் ஸ்பரிசத்தின் தூய்மை.
திடீரென-
உன் கல கல சிரிப்பில்
எனை முழுவதும் நனைத்துப் போனாய்.
என் முரட்டு மேனியிலும் மயில் தோகையென
சிலிர்த்துக் கொண்டன மயிர்க் கால்கள்.
நீ வந்து போன நெடுநேரம் கழித்தும்
மீசையின் மீது ஒட்டிக் கிடந்தது
உன் முத்தம்.
ஒட்டிப் போன ஆடையில் ஒட்டிக்கொண்டு
பிரிக்க விடாமல் ஏன் பிடிவாதம்...?
ஒரு வழியாய் உடல் துடைத்து
புதுத் துணி அணிந்த போது
உடல் முழுதும் பூசிக் கிடந்தது
உன் ஸ்பரிசத்தின் தூய்மை.
Labels:
கவிதை,
வசன கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)