Thursday, October 1, 2015

களிகொண்டு நிறைவாக

வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் “தமிழ்நாடு அரசுதமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்...உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டியில் வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி : இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை எழுதி வெளியிட நேரம் நிறைவடைந்துவிட்டாலும் வருத்தமில்லாமல் விருத்தமொன்று எழுதினேன்.. நேரம் கிடைக்கையில் இதை விரித்தும் எழுத உத்தேசம்!

ஈரெட்டு வயதினில் இளமையின் திறனோடு 
     நீர்விட்டு வளர்த்திடும் பயிராக   
நேரென்று நிமிர்ந்திடு நிலைமைகள் மாற்றிடு    
     நேற்றோடு குனிந்திடும் குணம்நீங்க 
வேரென்று பரவிடும் வீரத்தை விளைத்திடு 
     யாருக்கும் எதிர்நிற்கும் துணிவாக  
பாரெட்டிப் பரவிடும் பாராட்டிப் புகழ்வரும்  
     நீபெற்ற பெயர்மாறும் உயர்வாக 

ஏகட்டும் வீணது இணையட்டும் இனியது 
      நீயெட்டும் தொலைவின்று அருகாக 
பூகட்டும் நாரது பரமன்தோள் ஏறுது 
      நீசுற்றும் சுற்றங்கள் நனிதாக 
போகட்டும் போனது ஆகட்டும் ஆனது
      நீசெல்லும் வழியென்றும் புதிதாக  
 நீகட்டும் கொடியுயர் வான்முட்டிப் பறக்கட்டும்
      கைகொட்டி களிகொண்டு நிறைவாக  

4 comments:

மோ.சி. பாலன் said...

http://bloggersmeet2015.blogspot.com/2015/09/50000.html

அப்பாதுரை said...

நன்று!

vv9994013539@gmail.com said...

arputham:vaalthukal.

மோ.சி. பாலன் said...

mikka nandri Appadurai matrum My mobile Studios